நடை திறக்கும் முன் நான் சென்றுவிடுகிறேன்.. சபரிமலைக்காக குருசாமி தற்கொலை.. உருக்கமான கடிதம்!
சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவை சேர்ந்த குருசாமி ராமகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Recommended Video

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவை சேர்ந்த குருசாமி ராமகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சபரிமலை போராட்டம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.
அங்கு பெண்கள் நுழைவிற்கு எதிராக பெரிய போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு குருசாமி ராமகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

யார் இவர்
யார் இவர் கேரளாவை சேர்ந்த ராமகிருஷ்ணன் 85 வயது நிரம்பியவர். கேரளாவின் பந்தளூர் அருகே உள்ளே கிராமம் ஒன்றில் வசித்து வந்தார். கடந்த 60 வருடமாக இவர் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்துள்ளார். இவர் குருசாமி என்று சக பக்தர்களால் அழைக்கப்பட்டவர்.

குரல் கொடுத்தார்
சபரிமலை தீர்ப்பிற்கு எதிராக குரல் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். கடந்த சில நாட்களாக கேரளா மீடியாக்களில் தொடர்ந்து இவர் தோன்றி வந்தார். சபரிமலை பிரச்சனை தொடர்பாக நிறைய கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

தற்கொலை செய்தார்
இந்த நிலையில் நேற்று இவர் தற்கொலை செய்து கொண்டார். ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வருகிறது. சபரிமலை போராட்டம் மற்றும் தீர்ப்பின் துக்கம் தாங்காமலும், அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார் என்கிறார்கள்.

கடிதம் இருந்தது
இந்த நிலையில் அவரின் பாக்கெட்டில் கடிதம் ஒன்று இருந்துள்ளது. அதில், இதுதான் என் கடைசி நாள். அந்த கோவிலின் கதவுகள் திறக்கும் முன் நான் இந்த உலகைவிட்டு சென்றுவிட வேண்டும், என்று சிறிய கடிதம் எழுதி இருக்கிறார். இந்த சம்பவம் கேரளாவில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications