நடை திறக்கும் முன் நான் சென்றுவிடுகிறேன்.. சபரிமலைக்காக குருசாமி தற்கொலை.. உருக்கமான கடிதம்!
சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவை சேர்ந்த குருசாமி ராமகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Recommended Video

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவை சேர்ந்த குருசாமி ராமகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சபரிமலை போராட்டம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.
அங்கு பெண்கள் நுழைவிற்கு எதிராக பெரிய போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு குருசாமி ராமகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

யார் இவர்
யார் இவர் கேரளாவை சேர்ந்த ராமகிருஷ்ணன் 85 வயது நிரம்பியவர். கேரளாவின் பந்தளூர் அருகே உள்ளே கிராமம் ஒன்றில் வசித்து வந்தார். கடந்த 60 வருடமாக இவர் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்துள்ளார். இவர் குருசாமி என்று சக பக்தர்களால் அழைக்கப்பட்டவர்.

குரல் கொடுத்தார்
சபரிமலை தீர்ப்பிற்கு எதிராக குரல் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். கடந்த சில நாட்களாக கேரளா மீடியாக்களில் தொடர்ந்து இவர் தோன்றி வந்தார். சபரிமலை பிரச்சனை தொடர்பாக நிறைய கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

தற்கொலை செய்தார்
இந்த நிலையில் நேற்று இவர் தற்கொலை செய்து கொண்டார். ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வருகிறது. சபரிமலை போராட்டம் மற்றும் தீர்ப்பின் துக்கம் தாங்காமலும், அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார் என்கிறார்கள்.

கடிதம் இருந்தது
இந்த நிலையில் அவரின் பாக்கெட்டில் கடிதம் ஒன்று இருந்துள்ளது. அதில், இதுதான் என் கடைசி நாள். அந்த கோவிலின் கதவுகள் திறக்கும் முன் நான் இந்த உலகைவிட்டு சென்றுவிட வேண்டும், என்று சிறிய கடிதம் எழுதி இருக்கிறார். இந்த சம்பவம் கேரளாவில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications