5 வயது சிறுமியை கொடூரமாக சீரழித்துக் கொன்ற வளர்ப்புத் தந்தை.. மரண தண்டனை விதித்தது நீதிமன்றம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வளர்ப்பு தந்தைக்கு, மரண தண்டனை விதித்து பத்தனம்திட்டா நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி உடலில் 67 காயங்களுடன் 5 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் அந்தரங்க உறுப்புகள், முகம் உட்பட உடல் முழுக்க காயங்கள் இருந்தன. வீட்டு வேலை செய்யும் அந்தக் குழந்தையின் தாய், மதியம் வீட்டுக்கு வந்தபோது குழந்தை உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. குழந்தைக்கு அருகில், போதையில் அப்பெண்ணின் இரண்டாவது கணவர் படுத்திருந்தார்.

வளர்ப்புத் தந்தையே, பச்சிளம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது தெரியவந்தது. சிறுமியின் தாயார் அளித்த புகாரில், அவரது இரண்டாவது கணவரான தமிழ்நாட்டின் ராஜபாளையத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதமே போலீசார் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை பத்தனம்திட்டா அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வளர்ப்பு தந்தைக்கு, மரண தண்டனை விதித்து பத்தனம்திட்டா கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜெயக்குமார் ஜான் தீர்ப்பு அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications