மத்திய அமைச்சரின் வேட்புமனுவுக்கு பண உதவி.. நெகிழ வைத்த கேரளா மாணவ-மாணவிகள்.. சுவாரசிய பின்னணி
திருவனந்தபுரம்: கேரளா லோக்சபா தேர்தலில் போட்டியிடும் மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு கல்லூரி மாணவ-மாணவிகள் வேட்பு மனுத்தாக்கலுக்கான பணத்தை வழங்கினர். இந்நிலையில் தான் மத்திய அமைச்சருக்கு அந்த மாணவி ஏன் வேட்புமனு தாக்கலுக்கு பணம் வழங்கினார் என்பதன் பின்னணியில் உள்ள சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேரளாவில் மொத்தம் 20 லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 26 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவை பொறுத்தமட்டில் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆளும் இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் தான் 3 கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். வேட்பு மனு தாக்கல் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மத்திய அமைச்சர் முரளிதரன் போட்டியிடுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை இணையமைச்சராக முரளிதரன் உள்ளார். இவர் ராஜ்யசபா எம்பியாக உள்ள நிலையில் வரும் லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். முரளிதரன் கேரளாவில் உள்ள அட்டிங்கால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தற்போது காங்கிரஸ் எம்பியாக அடூர் பிரகாஷ் உள்ளார். இவர் மீண்டும் களமிறங்கி உள்ள நிலையில் முரளிதரனை எதிர்கொள்ள உள்ளார்.
‛‛தேர்தல் செலவுக்கு பணம் இல்லையாம்’’.. தமிழகத்தில் போட்டியிடாதது ஏன்? நிர்மலா சீதாராமன் விளக்கம்
இந்நிலையில் தான் முரளிதரனின் வேட்புமனு தாக்கலுக்கு தேவையான பணத்தை கல்லூரி மாணவ-மாணவிகள் வழங்கி உள்ளனர். லோக்சபா தேர்தலில் பொதுத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலின்போது ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த ரூ.25 ஆயிரத்தை தான் மாணவ-மாணவிகள் வழங்கி உள்ளனர். இந்த பணத்தை வைத்து தான் முரளிதரன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தேர்தலுக்கு பணமில்லையா? மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இதற்கிடையே தான் அந்த மாணவ-மாணவிகள் எதற்காக முரளிதரனின் வேட்புமனுத்தாக்கலுக்கு பணம் கொடுத்தனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பணம் வழங்கிய மாணவ-மாணவிகள் கேரளாவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் உக்ரைன் நாட்டு கல்லூரிகளில் படித்தனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கிய நிலையில் மாணவ-மாணவிகள் அங்கு தவித்தனர். மத்திய அரசு மாணவ-மாணவிகளை பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்து வந்தது.
ராகுலுக்கு எதிராக போட்டியிடும்.. பாஜக வேட்பாளர் மீது 242 கிரிமினல் வழக்குகள்! பரபர கேரள தேர்தல் களம்
இதில் மத்திய வெளியுறவுத்துறையின் பங்கு மிகவும் முக்கியமானது. இந்நிலையில் தான் மத்திய வெளியறவுத்துறை இணை அமைச்சராக உள்ள முரளிதரனுக்கு உக்ரைனில் இருந்து திரும்பி மாண-மாணவிகள் வேட்புமனுவுக்கான ரூ.25 ஆயிரத்தை வழங்கி உள்ளனர். உக்ரைனில் இருந்து பத்திரமாக மீட்டு வந்ததற்கு நன்றி கூறும் வகையில் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் இந்த பணத்தை வழங்கி உள்ளனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications