கேரளா கோயில் திருவிழாவில் பயங்கரமாக மோதிக்கொண்ட யானைகள்.. அலறியடித்து மக்கள் ஓட்டம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆராட்டுப்புழாவில் நடந்த கோவில் திருவிழாவில் யானைகள் நேருக்கு நேர் ஒன்றுக்கொன்று பயங்கரமாக மோதிக்கொண்டன. இதனால் கோவிலில் உள்ள பக்தர்கள் நாலாபுறமும் சிறதி ஓடினர். இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
கேரளாவில் கோயில் திருவிழாவில் பங்கேற்க அழைத்து வரப்பட்ட இரண்டு யானைகள் ஒன்றுக்கொன்று பயங்கரமாக மோதிக்கொண்டன. ஆக்ரோஷத்துடன் இரண்டு யானைகளும் சண்டையிட்டுக் கொண்டதால் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

அதிக அளவு வனப்பகுதியையும், மலைப் பகுதியையும் கொண்ட மாநிலம் கேரளா. கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் யானைகளும் அதிக அளவில் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன. அதேபோன்று கோயில் திருவிழாக்களில் யானைகள் அழைத்து வருவது கேரளாவில் வழக்கமாக உள்ளது.
கோவில் திருவிழா: யானைகளுக்கு அலங்காரமிட்டு பூஜைகள் செய்து கோயில் திருவிழாக்களில் பங்கேற்க வைக்கப்படும். கோயில் திருவிழாக்களில் கலந்து கொள்வதற்காகவே பிரத்தியேகமாக வளர்க்கப்படும் யானைகள் வரவழைக்கப்பட்டு, நிகழ்ச்சிகள் நடைபெறும். சுவாமி சிலையை தாங்கி வலம் வரும் யானைக்கு, தங்க முலாம் பூசப்பட்ட நெற்றி பட்டம் மற்றும் உயர்தர பட்டியல் செய்த பீதாம்பரம் ஆகியவை அணிவிக்கப்படும்.
சில நேரங்களில் இப்படி கோயில் விழாக்களில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு திடீரென்று மதம் பிடித்து பக்தர்களை ஓட ஓட விரட்டும் அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறுவதுண்டு. தற்போது அதேபோல கோயில் விழாவில் யானைகள் செய்த ரகளையால் பக்தர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். கேரளாவின் ஆராட்டுப்புழா பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் நேற்று திருவிழா நடைபெற்றது.
நேருக்கு நேர் மோதிக்கொண்ட யானைகள்: இதில் இரண்டு யானைகள் பங்கேற்க அழைத்து வரப்பட்டன. யானைகள் ஆடி அசைந்து ஊர்வலமாக வந்தது. பக்தர்களும் அங்கு திரண்டு இருந்தனர். இரண்டு யானைகளும் நேருக்கு நேர் வந்த போது திடீரென இரண்டும் மோதிக்கொண்டன. யானைகளை கட்டுப்படுத்த பாகன்களால் முடியவில்லை. ஆக்ரோஷமாக யானைகள் மோதிக்கொண்டதை பார்த்து பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
உடனடியாக யானைகளை கட்டுப்படுத்தும் குழுவினர் வந்து இரண்டு யானைகளையும் தனித்தனியே கொண்டு சென்றனர். இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. 4 பக்தர்கள் லேசான காயம் அடைந்தனர். யானைகள் மோதிக்கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா?












Click it and Unblock the Notifications