கேரளா கோயில் திருவிழாவில் பயங்கரமாக மோதிக்கொண்ட யானைகள்.. அலறியடித்து மக்கள் ஓட்டம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆராட்டுப்புழாவில் நடந்த கோவில் திருவிழாவில் யானைகள் நேருக்கு நேர் ஒன்றுக்கொன்று பயங்கரமாக மோதிக்கொண்டன. இதனால் கோவிலில் உள்ள பக்தர்கள் நாலாபுறமும் சிறதி ஓடினர். இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
கேரளாவில் கோயில் திருவிழாவில் பங்கேற்க அழைத்து வரப்பட்ட இரண்டு யானைகள் ஒன்றுக்கொன்று பயங்கரமாக மோதிக்கொண்டன. ஆக்ரோஷத்துடன் இரண்டு யானைகளும் சண்டையிட்டுக் கொண்டதால் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

அதிக அளவு வனப்பகுதியையும், மலைப் பகுதியையும் கொண்ட மாநிலம் கேரளா. கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் யானைகளும் அதிக அளவில் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன. அதேபோன்று கோயில் திருவிழாக்களில் யானைகள் அழைத்து வருவது கேரளாவில் வழக்கமாக உள்ளது.
கோவில் திருவிழா: யானைகளுக்கு அலங்காரமிட்டு பூஜைகள் செய்து கோயில் திருவிழாக்களில் பங்கேற்க வைக்கப்படும். கோயில் திருவிழாக்களில் கலந்து கொள்வதற்காகவே பிரத்தியேகமாக வளர்க்கப்படும் யானைகள் வரவழைக்கப்பட்டு, நிகழ்ச்சிகள் நடைபெறும். சுவாமி சிலையை தாங்கி வலம் வரும் யானைக்கு, தங்க முலாம் பூசப்பட்ட நெற்றி பட்டம் மற்றும் உயர்தர பட்டியல் செய்த பீதாம்பரம் ஆகியவை அணிவிக்கப்படும்.
சில நேரங்களில் இப்படி கோயில் விழாக்களில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு திடீரென்று மதம் பிடித்து பக்தர்களை ஓட ஓட விரட்டும் அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறுவதுண்டு. தற்போது அதேபோல கோயில் விழாவில் யானைகள் செய்த ரகளையால் பக்தர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். கேரளாவின் ஆராட்டுப்புழா பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் நேற்று திருவிழா நடைபெற்றது.
நேருக்கு நேர் மோதிக்கொண்ட யானைகள்: இதில் இரண்டு யானைகள் பங்கேற்க அழைத்து வரப்பட்டன. யானைகள் ஆடி அசைந்து ஊர்வலமாக வந்தது. பக்தர்களும் அங்கு திரண்டு இருந்தனர். இரண்டு யானைகளும் நேருக்கு நேர் வந்த போது திடீரென இரண்டும் மோதிக்கொண்டன. யானைகளை கட்டுப்படுத்த பாகன்களால் முடியவில்லை. ஆக்ரோஷமாக யானைகள் மோதிக்கொண்டதை பார்த்து பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
உடனடியாக யானைகளை கட்டுப்படுத்தும் குழுவினர் வந்து இரண்டு யானைகளையும் தனித்தனியே கொண்டு சென்றனர். இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. 4 பக்தர்கள் லேசான காயம் அடைந்தனர். யானைகள் மோதிக்கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications