அச்சுதானந்தன் உடல்நிலையில் முன்னேற்றம்... மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு நின்றது
திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதலமைச்சருமான அச்சுதானந்தனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு மூச்சுத்திணறல் மற்றும் கடுமையான தலைவலி காரணமாக அச்சுதானந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வரும் மருத்துவர்கள், அச்சுதானந்தன் உடல்நிலை தேறிவருவதாக கூறியுள்ளனர்.

வயது மூப்பு நோய்
கேரள அரசியலில் முக்கியத் தலைவர், அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்பன உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்டவர் வி.எஸ்.அச்சுதானந்தன். அண்மைக்காலத்தில் வயது மூப்பு காரணமாக அவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது.

கடும் தலைவலி
கடந்த சனிக்கிழமை இரவு அச்சுதானந்தனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. கூடவே கடுமையான தலைவலியும் எற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.யூ.டி.ராயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை
அச்சுதானந்தனை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதையும் கண்டறிந்து தீவிர சிகிச்சையை தொடங்கினர். மேலும், அவரை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்தும் வந்தது.

ரத்தக்கசிவு நின்றது
கடந்த 2 நாட்களாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததன் விளைவாக மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு நிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அச்சுதானந்தன் உடல்நிலை தேறி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அனுமதியில்லை
அச்சுதானந்தன் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில் குவியத் தொடங்கியுள்ளனர். ஆனால் அவரை காண மருத்துவமனை நிர்வாக அனுமதி மறுத்துள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications