"புதைந்த கிராமங்கள்.. பல நூறு பேர் மாயம்.." அதிகாலை நடந்தது என்ன.. உள்ளூர்வாசி பகீர் தகவல்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், அங்கு சுமார் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். இதில் சிக்கி இதுவரை 19க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே கேரளாவில் ஏற்பட்ட இந்த திடீர் நிலச்சரிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து சில தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை காரணமாகக் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே கேரள மாநிலத்தில் நேற்றிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

Wayanad Landslide kerala

நிலச்சரிவு: அங்கே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த இடத்தை சென்றடைவதே மீட்புப் படையினருக்குக் கடினமாக இருக்கும் நிலையில், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், "மேப்பாடி அருகே மலைப்பகுதிகளில் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், மலப்புரம், நீலம்பூர் பகுதிக்குப் பாயும் சாலியாறு ஆற்றில் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். வயநாட்டில் உள்ள மேப்பாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட முண்டக்கை மற்றும் சூரல்மாலா பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது" என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஹெலிகாப்டர்கள்: நிலச்சரிவைத் தொடர்ந்து கோவை சூலூரில் இருந்து வயநாட்டிற்கு இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன.. தவிர, இந்திய ராணுவத்தின் பாதுகாப்புப் படையின் இரண்டு பட்டாலியன்களும் கண்ணூரில் இருந்து வயநாட்டிற்குச் சென்றுள்ளன. அங்கே அவர்கள் மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், "நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கையில் ஏராளமான வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளன. அந்த இடத்திற்குச் செல்லும் பாலம் கூட அடித்துச் செல்லப்பட்டதால், இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களுக்கு உதவக் கிராம மக்கள் விரைந்து செல்ல முடியவில்லை. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழும் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது" என்றார்.

என்ன காரணம்: வயநாடு உட்பட கேரளாவின் பல வட மாவட்டங்களில் நேற்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. கேரளாவின் பெரும்பாலான பகுதிகள் மழைகளால் சூழப்பட்ட பகுதிகள் இப்போது நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளும் அதேபோலத் தான்.. அங்கே நேற்று காலை முதல் பல மணி நேரம் கனமழை கொட்டிய நிலையில், அதுவே நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ளது.

வயநாட்டில் 4 மணி நேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலச்சரிவுகள்.. காரணம் என்ன?


பிரதமர் மோடி:
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தொலைப்பேசி வழியாகப் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "வயநாட்டின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.. இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டோருக்கு உதவ தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசியுள்ளேன். அங்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்" எனப் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸின் ராகுல் காந்தியும் இந்த நிலச்சரிவு சம்பவத்திற்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். கேரள முதல்வர், வயநாடு மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாகப் பேசியதாகவும் மீட்பு நடவடிக்கைகள் விரைவாக நடந்து வருவதாக அவர்கள் உறுதியளித்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+