இலங்கை தமிழர்களின் நிலை என்ன ஆகும்? பொங்கி எழுந்த பினராயி விஜயன்.. குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் இருக்கும் இலங்கை தமிழ் அகதிகளின் நிலை என்ன ஆகும் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video
திருவனந்தபுரம்: குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் இருக்கும் இலங்கை தமிழ் அகதிகளின் நிலை என்ன ஆகும் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பி உள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதா பெரும் எதிர்ப்பலைகளை சந்தித்து வருகிறது. நாடு முழுக்க பல மாநில தலைவர்கள் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்க தொடங்கி உள்ளது.
நாடு முழுக்க ஒரே கொள்கை கொண்ட நட்பான கட்சிகளை இந்த மசோதா இணைத்து இருக்கிறது. இந்த மசோதாவிற்கு எதிராக கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

என்ன உரிமை
இந்த மசோதா குறித்து பினராயி விஜயன் கூறி இருப்பதாவது, இந்தியாவில் இருக்கும் எல்லா இந்தியர்களுக்கும் குடியுரிமையை அடிப்படை உரிமை என்று இந்திய சட்டம் கூறுகிறது. மதம், சாதி , மொழி , கலாச்சாரம், பாலினம் கடந்து இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதை உடைக்கும் அளவிற்கு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

மோசம்
மத ரீதியாக மக்களை பிரிக்கும் வகையில், மத ரீதியாக குடியுரிமை வழங்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இது இந்திய இறையாண்மைக்கும், சட்டத்திற்கும் முழுக்க முழுக்க எதிரானது. மக்களை பிரித்து கலவரத்தை தூண்ட இது நினைக்கிறது.

மூன்று நாடு
மூன்று நாட்டில் இருந்து இந்தியா வரும் 6 மதத்தினருக்கு மட்டும் சலுகை வழங்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் இதனால் இந்தியாவின் இரண்டாம் குடி மக்களாக மாறுவார்கள். இந்தியாவிலேயே அவர்கள் அகதிகளாக மாறும் சூழல் உருவாகும்.

எதிரான சட்டம்
குடியுரிமை சட்ட திருத்த மசோதா நீதிக்கு எதிரானது.முழுக்க முழுக்க இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்த சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து வரும் தமிழ் அகதிகளின் நிலை என்ன.

தமிழ் மக்கள்
தமிழர்களை பற்றி மத்திய அரசு யோசிக்கவில்லை. அவர்கள் இந்தியாவில் இருப்பதாகவும் ஆர்எஸ்ஸுக்கு தெரியுமா?. தமிழ் அகதிகள் குறித்து சட்டத்தில் எதுவும் இல்லை, என்று பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications