என்னங்க இது? திடீரென சென்னையிலிருந்து கேரளாவிற்கு போன வந்தே பாரத்.. அதுவும் ஆரஞ்ச் கலர்.. ஏன்?
திருவனந்தபுரம்: நேற்று சென்னையில் இருந்து கேரளா நோக்கி ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயில் சென்றது. இந்த பயணத்திற்கு பின் முக்கியமான காரணம் உள்ளது.
சமீபத்தில் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வழியாக மைசூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.

இந்த ரயில் மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை - கோவை இடையே பயணிகள் அதிக அளவில் பயணிக்கும் நிலையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான டிக்கெட் வரிசையாக இந்த மாதம் முழுக்க பல சீட்களுக்கு புக் செய்யப்பட்டு உள்ளது.
அந்த அளவிற்கு மக்கள் இந்த ரயிலில் செல்ல தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது. சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும். அதேபோல் வரும் 24ம் தேதி சென்னை - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் தொடங்க உள்ளது.
திருவனந்தபுரம் ரயில்: அதேபோல் சமீபத்தில் கேரளாவில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோடு வரை இயக்கப்படும்.
ஆனால் இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு செல்ல 8 மணி நேரம் 5 நிமிடங்கள் ஆகும். முதல் நாள் பயணத்தில் இது சரியாக 8 மணி நேரம் 5 நிமிடங்கள் வரை எடுத்துக்கொண்டது. கிட்டத்தட்ட 68 கிமீ வேகத்தில்தான் இந்த ரயில் பயணம் செய்தது.
இந்த ரயிலில் சென்றால் விரைவாக சென்றுவிட முடியும் என்று நினைத்த பயணிகள் பலரும் பயண நேரத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். முன்னதாக சோதனை ஓட்டத்திலேயே இந்த ரயில் தாமதமாக வந்தது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம் - கன்னூர் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டத்திலேயே 10 நிமிடம் தாமதமாக வந்துள்ளது. திருவனந்தபுரம் - கன்னூர் வந்தே பாரத் ரயில் 7. 20 மணி நேரத்தில் திருவனந்தபுரம் ஸ்டேஷனில் இருந்து கன்னூர் வந்தே பாரத் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது .
இந்த ரயில் வெறும் 70 கிமீ வேகத்தில்தான் பயணம் செய்துள்ளது. கன்னூரில் பிற்பகல் 2.10க்கு தொடங்கி இரவு 9.30 மணிக்குத்தான் இந்த ரயில் திருவனந்தபுரம் வந்துள்ளது. இந்த ரயில்சேவை தற்போது நடைபெற்று வரும் நிலையில்தான், நேற்று சென்னையில் இருந்து கேரளா நோக்கி ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயில் சென்றது. இந்த பயணத்திற்கு பின் முக்கியமான காரணம் உள்ளது.
இந்த ஆரஞ்ச் நிற ரயில் திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்பட்டது. இங்கிருந்துதான் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு சென்று பின்னர் அங்கிருந்து காசர்கோடு வரை வரும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும். இதன் காரணமாகவே சென்னையில் இருந்து கேரளாவிற்கு வந்தே பாரத் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications