கேரளாவில் களைகட்டும் உலகப்புகழ் பெற்ற பூரம் திருவிழா.. பாதுகாப்பு வளையத்திற்குள் திருச்சூர்
திருச்சூர்: உலகப்புகழ் பெற்ற பூரம் திருவிழா கேரள மாநிலம் திருச்சூரில் களைகட்டியுள்ளது. 30 நாள் நடக்கும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 100-க்கும் மேற்பட்ட யானைகள் திரளும் அணிவகுப்பு நாளை நடைபெற உள்ளது.
நாளைய நிகழ்வில் செண்டை உள்ளிட்ட கேரள மாநிலத்தின் பாரம்பரிய இசைக்கருவிகளை கொண்ட பஞ்ச வாத்தியங்களின் சப்தம் விண்ணை பிளக்க உள்ளது. வான வேடிக்கைகளும் களை கட்டும்.

யானைகள் தங்கள் முகப்பகுதியில் அணியும் தங்க ஜரிகைகளால் ஆன நெற்றிபட்டம், மயிலிறகுகளாலான ஆலவட்டம், எருதின் முடிகளால் ஆன வெஞ்சாமரம், முத்துகளால் தொகுக்கப்படும் முத்துகுடா இவைகள் யாவும் யானைகளின் மீது அமரும் அம்பாரிகளால் பார்வைக்கு வைக்கப்படும். இந்த கலைநயமிக்க ஆபரணங்கள் யாவும் பரமேக்காவு மற்றும் திருவெம்பாடி கோயில்களில் வடிவமைக்கப்படுகின்றன.
இதற்கான ஒத்திகை திருச்சூரின் வடக்குநாத சிவன் கோயில் திடலில் சிறப்பாக நடைபெற்றது. பூரம் விழாவில் பங்கேற்க கேரளாவின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மக்கள் திருச்சூருக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர்.
கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலத்தினரும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் திருச்சூரில் குவிந்து வருகின்றனர். திருவம்பாடி, வடக்கு நாதர் உள்ளிட்ட 3 கோவில்களில் பூரம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து குறிப்பிட்ட கோவில்களில் பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மெட்டல் டிடெக்ட்டர் வைத்து சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவில்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நாளைய பூரம் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்பதால் திருச்சூர் நகரே காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது
இலங்கை தொடர் குண்டுவெடிப்புகளுக்கு சம்பந்தப்பட்ட தீவிரவாத அமைப்பினர், பாலக்காடு அருகே சிக்கியதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன. தீவிர சோதனைகளுக்கு பிறகே பக்தர்கள் நாளைய திருவிழாவிற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே பக்தர்கள் கைப்பை உள்ளிட்ட எதையும் எடுத்து வர வேண்டாம் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications