கேரளாவில் பாஜகவுக்கு 'பூஜ்ஜியம்'! மாஸ் காட்டும் இந்தியா கூட்டணி! ஜீ நியூஸ் மேட்ரைஸ் கருத்துக்கணிப்பு
திருவனந்தபுரம்: எதிர்வரும் லோக்சபா தேர்தலில் கேரள மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என்பது குறித்து ஜீ நியூஸ் - மேட்ரைஸ் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கேரள மாநிலத்திற்கு என தனித்த அடையாளம் இருக்கிறது. கல்லூரியிலேயே மாணவர் தேர்தல் நடத்தப்படுவதால் தேர்தல் ஜனநாயகம் குறித்த சிறப்பான புரிதல்களை கேரள இளைஞர்கள் கொண்டிருக்கின்றன. காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்தான் இங்கு மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.

இருப்பினும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் ஷாகா, உ.பியை அடுத்து வேறு எந்த மாநிலத்தை காட்டிலும் இங்குதான் அதிக அளவில் இருக்கிறது. ஆனாலும், பாஜகவால் தேர்தலில் வெல்ல முடியவில்லை. இந்நிலையில் எதிர்வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்த குறித்த ஜீ நியூஸ் - மேட்ரைஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இந்தியா கூட்டணிக்கு 20 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. பாஜகவுக்கு ஒரேயொரு சீட் கூட கிடைக்காது என்று சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 11 தொகுதிகளையும், இடதுசாரி கூட்டணி 9 தொகுதிகளையும் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications