ரெடி ஆகுங்க மக்களே.. கொடைக்கானலில் 24 முதல் கோடை விழா! குளு குளு சீசனை அனுபவிக்க புதிய அருவி வருது
திண்டுக்கல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் கூறியுள்ளார். குறிப்பாக கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியில் 'பெப்பர் அருவி' என்ற புதிய சுற்றுலாத்தலம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் ஆட்சியர் கூறியுள்ளார்
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடக போன்ற பல்வேறு வெளிமாநிலங்களிருந்து விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமான சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், வரக் கூடிய 24ஆம் தேதி முதல் 01.06.2025 தொடர்ந்து ஒன்பது நாட்கள் வரை பிரையன்ட் பூங்காவில் மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா நடைபெற இருக்கிறது.

இதில் தினந்தோறும் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் , பரதநாட்டியம், மேஜிக் ஷோ, நாய்கள் கண்காட்சி சைக்கிள் போட்டி, படகு போட்டி, வாத்து பிடித்தல் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சரவணன்,முதல் முறையாக ரோஜா தோட்டத்தில் தினந்தோறும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
மலர்க் கண்காட்சியில் மயில், புவிசார் குறியீடு பெற்ற திண்டுக்கல் பூட்டு, மலைப்பூண்டு, கொய்யாகனி, செல்பிபாயின்ட், பூனை, பூமரம் போன்ற மலர்களால் ஆன உருவ அமைப்புகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காய், கனிகளால் உருவாக்கப்படும் யானை, மர அணில், கருப்பு மற்றும் ஆரஞ்சு நிற ப்ளை கேட்சர், சிறுத்தை, பஞ்சவர்ண கிளி ஆகியவை மலர்க்கண்காட்சியில் வடிவமைக்கப்பட உள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
தற்பொழுது கொடைக்கானலில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் விதமாக நகரின் முக்கிய பகுதியில் 360° செல்பி பாயிண்ட், ஏரி சாலைப் பகுதியில் இரவு நேரங்களில் லேசர் லைட் ஷோ மற்றும் வான் சாகச நிகழ்ச்சி ஆகியவை முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக 150க்கு மேற்பட்ட காவலர்கள் பணியில் அமர்த்த உள்ளதாகவும், 50க்கும் மேற்பட்ட இ டாய்லெட் அமைக்க உள்ளதாகவும், ஆங்காங்கே வாகன நிறுத்தம் செய்வதற்கு இடம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், நகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் சுற்றுலாப்பயணிகள் அவசர தொடர்புக்கு சிறப்பு கட்டுப்பாட்டு அறை செயல்படுத்திருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த நிலையில் கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் துவங்கியிருந்தாலும் இ_பாஸ் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் சுற்றுலா பயணிகள் வரத்து குறைவாக காணப்படுகிறது. மேலும் வார இறுதி நாட்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்ட நிலையில் மற்ற இடைப்பட்ட நாட்களில் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் சுற்றுலா தொழிலை நம்பி தொழில் செய்து வருபவர்களும் தற்பொழுது மகிழ்ச்சியில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications