ரெடி ஆகுங்க மக்களே.. கொடைக்கானலில் 24 முதல் கோடை விழா! குளு குளு சீசனை அனுபவிக்க புதிய அருவி வருது
திண்டுக்கல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் கூறியுள்ளார். குறிப்பாக கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியில் 'பெப்பர் அருவி' என்ற புதிய சுற்றுலாத்தலம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் ஆட்சியர் கூறியுள்ளார்
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடக போன்ற பல்வேறு வெளிமாநிலங்களிருந்து விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமான சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், வரக் கூடிய 24ஆம் தேதி முதல் 01.06.2025 தொடர்ந்து ஒன்பது நாட்கள் வரை பிரையன்ட் பூங்காவில் மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா நடைபெற இருக்கிறது.

இதில் தினந்தோறும் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் , பரதநாட்டியம், மேஜிக் ஷோ, நாய்கள் கண்காட்சி சைக்கிள் போட்டி, படகு போட்டி, வாத்து பிடித்தல் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சரவணன்,முதல் முறையாக ரோஜா தோட்டத்தில் தினந்தோறும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
மலர்க் கண்காட்சியில் மயில், புவிசார் குறியீடு பெற்ற திண்டுக்கல் பூட்டு, மலைப்பூண்டு, கொய்யாகனி, செல்பிபாயின்ட், பூனை, பூமரம் போன்ற மலர்களால் ஆன உருவ அமைப்புகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காய், கனிகளால் உருவாக்கப்படும் யானை, மர அணில், கருப்பு மற்றும் ஆரஞ்சு நிற ப்ளை கேட்சர், சிறுத்தை, பஞ்சவர்ண கிளி ஆகியவை மலர்க்கண்காட்சியில் வடிவமைக்கப்பட உள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
தற்பொழுது கொடைக்கானலில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் விதமாக நகரின் முக்கிய பகுதியில் 360° செல்பி பாயிண்ட், ஏரி சாலைப் பகுதியில் இரவு நேரங்களில் லேசர் லைட் ஷோ மற்றும் வான் சாகச நிகழ்ச்சி ஆகியவை முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக 150க்கு மேற்பட்ட காவலர்கள் பணியில் அமர்த்த உள்ளதாகவும், 50க்கும் மேற்பட்ட இ டாய்லெட் அமைக்க உள்ளதாகவும், ஆங்காங்கே வாகன நிறுத்தம் செய்வதற்கு இடம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், நகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் சுற்றுலாப்பயணிகள் அவசர தொடர்புக்கு சிறப்பு கட்டுப்பாட்டு அறை செயல்படுத்திருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த நிலையில் கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் துவங்கியிருந்தாலும் இ_பாஸ் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் சுற்றுலா பயணிகள் வரத்து குறைவாக காணப்படுகிறது. மேலும் வார இறுதி நாட்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்ட நிலையில் மற்ற இடைப்பட்ட நாட்களில் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் சுற்றுலா தொழிலை நம்பி தொழில் செய்து வருபவர்களும் தற்பொழுது மகிழ்ச்சியில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications