கொடைக்கானல் அடிவாரம்.. ஒட்டன்சத்திரம் தலையூத்து அருவிக்கு நண்பர்கள் ஜாலி சுற்றுலா.. கடைசி வீடியோ

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாட்சியில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மேல், கீழ் தலையூத்து அருவிகள் உள்ளன. பரப்பலாறு அணையில் இருந்து இந்த அருவிகளுக்குத் தண்ணீர் வருகிறது. இதில் தலையூத்து அருவியில் புதைக்குழி, சுழல் உள்ள பகுதியில் யாரும் குளிக்க அனுமதி இல்லை. அதேவேளையில் மேல் தலையூத்து அருவிக்குச் செல்ல முற்றிலுமாக பொதுமக்களுக்குத் தடை உள்ளது. ஆனால் இதை கேட்காமல் சுற்றுலா பயணிகள் செல்கிறார்கள். அப்படித்தான் மகிழ்ச்சியுடன் அருவிக்குச் சென்ற 4 இளைஞர்களின் கடைசி வீடியோ வெளியாகி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாட்சியில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மேல், கீழ் தலையூத்து அருவிகள் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த அபாயகரமான இடஙகள் ஆகும். தலையூத்து அருவிக்கு பரப்பலாறு அணையில் இருந்து இந்த அருவிகளுக்குத் தண்ணீர் வரத்து வருகிறது. தலையூத்து அருவி பகுதிக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வார்கள்.

Kodaikanal Foothills The final video of youths joyfully heading to the Thalaiyuthu Falls

இதில் கீழ் தலையூத்து அருவியில் புதைக்குழி, சுழல் உள்ள பகுதியில் யாரும் குளிக்க அனுமதி எப்போதுமே கிடையாது. அத்துடன் மேல் தலையூத்து அருவிக்குச் செல்ல முற்றிலுமாக பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு வனத்துறையினரின் கண்காணிப்பு பலமாகவே இருக்கும். ஆனால் அதனையும் மீறி அத்துமீறி சிலர் அருவிக்குச் சென்று வருகிறார்கள். அவ்வாறு சென்றவர்களில் சிலர் ஆழம் தெரியாமல் அருவியின் தடாகத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அப்படித்தான் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டிப் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் 11 பேர் நேற்று விருப்பாட்சி தலையூத்து அருவியைப் பார்வையிட வந்தனர். அப்போது அவர்கள் தடை செய்யப்பட்ட மேல் தலையூத்து அருவிக்குச் சென்றனர். பின்பு வனத்துறையின் தடையை மீறி அங்குள்ள அருவி தடாகத்தில் குளித்ததாகத் தெரிகிறது.

அப்போது பள்ளப்பட்டியைச் சேர்ந்த அகமது சிராஜ் மகன் ஆடில் (வயது 19), நாசர்அலி மகன் சதாம் உசேன் (18), சேக் அலாவுதீன் மகன் ஆயாஸ் (19), உமர்பாருக் மகன் பயாஸ் (19) ஆகிய 4 பேர் திடீரென அருவி தடாக நீரில் மூழ்கி உள்ளார்கள். அதைக் கண்டதும் உடன் வந்த நண்பர்களை பார்த்து "காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்..." என கூச்சலிட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை..

பின்னர் மற்ற 7 வாலிபர்களும் செய்வதறியாது தவித்துள்ளனர். தொடர்ந்து விருப்பாட்சிக்கு வந்துள்ளனர். அங்கிருந்து ஒட்டன்சத்திரம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், தீயணைப்புப் படையினர், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்புப் படையினர்கள் அருவியின் தடாகத்தில் பாதுகாப்பு உபகரணங்களுடன் இறங்கி, நீரில் மூழ்கி மாயமான 4 பேரையும் தீவிரமாகத் தேடினர். ஆனால் இரவு வரை அவர்கள் கிடைக்கவில்லை.

தொடர்ந்து இன்று காலை தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஒன்றிணைந்து தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தினர். இதில் முதற்கட்டமாக மூன்று இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான மற்ற ஒருவரை தேடும் பணி தற்போதும் தொடர்ந்து வருகிறது.

இதனிடையே, உயிரிழந்த இளைஞர்கள் அருவிக்குச் செல்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு தங்களது செல்போனில் எடுத்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நண்பர்கள் அனைவரும் சிரித்துப் பேசிக்கொண்டே, அதுதான் தங்களின் கடைசிப் பயணம் எனத் தெரியாமல் உற்சாகமாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+