Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊட்டிக்கு இந்த வார இறுதியில் சுற்றுலா போனால் 'அந்த தரிசனம்' உறுதி.. நீலகிரி வனத்துறை சூப்பர் முடிவு

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா மலைச் சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொட்டபெட்டா மலைசிகர சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் பாஸ்ட் டேக் அமைப்பதற்கான இறுதிகட்ட பணிகள் நடந்து வருவதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படும் என்று வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே வரும் சனிக்கிழமை முதல் சுற்றுலா செல்வோர் ரசிக்கலாம்.

இந்த வார இறுதியில் 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது.

tour ooty Nilgiri

தற்போதைய நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சாலையில் தேயிலை பூங்கா அருகே கற்பூர மரம் ஒன்று சாலையின் குறுக்கே நேற்று விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர், தேவாலா, உப்பட்டி, சேரம்பாடி, எருமாடு, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் பலத்த மழை பெய்தது. இதனால் பந்தலூரில் இருந்து கூடலூர், கோழிக்கோடு செல்லும் சாலையில் தேவகிரி, நீர்மட்டம் பகுதிகளில் 2 மரங்கள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக தமிழக-கேரள மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து வந்த ஊழியர்கள் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

தொடர் மழையால் குன்னூருக்கு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது. சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் போன்ற முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. இதனால் பூங்காக்கள் வெறிச்சோடி இருந்தது. சிம்ஸ் பூங்கா ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் இல்லாததால், அங்கு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த வார இறுதியில் 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை நாளை முதல் அதிகரிக்கும் என தெரிகிறது. சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்த நிலையில், தொட்டபெட்டா மலை சிகர சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் பாஸ்ட் டேக் அமைப்பதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.

இதனால் 4 நாட்களாக தொட்டபெட்டா செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை மறுநாள் முதல் தொட்டா பெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வார இறுதியில் ஊட்டிக்கு சுற்றுலா செல்வோர் தொட்டா பெட்டா மலை சிகரத்தை ரசிக்க முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+