மலைப்பாம்பை நெருங்கிய மரணம்.. மயக்க மருந்து செலுத்தி சிகிச்சையளித்து காப்பாற்றிய டாக்டர்கள்.. சபாஷ்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மீன்பிடி வலையில் சிக்கி 4.2 கிலோ எடையுடன் 6 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு உயிருக்கு போராடியது. இதையடுத்து அந்த மலைப்பாம்பு மீட்கப்பட்டதோடு, கால்நடை டாக்டர்கள் மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளித்து காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் மீன்பிடி வலையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கி கொண்டது. மலைப்பாம்பின் உடலில் மீன்பிடி வலை சுற்றி கொண்டது. இதனால் மலைப்பாம்பு எவ்வளவு முயன்றும் வலையை விட்டு செல்ல முடியவில்லை.

இதனை பார்த்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மூலக்கல் வனத்துறை ரேஞ்சர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று வலையில சிக்கிய மலைப்பாம்பை மீட்டனர்.
பிறகு உடனடியாக மலைபாம்பு திருநெல்வேலி கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு டீன் எட்வின், டாக்டரும், உதவி பேராசிரியர்களுமான ஷிஜு சைமன், கிஷ்ணவேணி ஆகியோர் மலைப்பாம்புக்கு சிகிச்சை அளித்தனர். இதனால் அந்த மலைப்பாம்பு உயிர் பிழைத்தது.
இதுபற்றி அவர்கள் கூறுகையில், ''மலைப்பாம்பு 4.2 கிலோ எடையுடன் இருந்தது. மொத்தம் 6 அடி நீளத்தில் இருந்தது. பாம்பின் உடலில் மீன்பிடி வலை சுற்றியதால் தலைக்குக் கீழே சுமார் ஒரு அடி இடைவெளியில் உடல்பகுதியில் காயங்கள் ஏற்பட்டு இருந்தது. மீன்பிடி வலை மிகவும் இறுக்கமாகச் சுற்றியிருந்ததால் பாம்பின் தோல் கிழிந்து தசைகள் வெளியே தெரிந்தது. சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
பாம்பிற்கு மயக்க மருந்து வழங்கப்பட்டு உடலில் சிக்கியிருந்த வலை அகற்றப்பட்டது. காயமடைந்த இடத்தில் தையல் போடப்பட்டது. பாம்பிற்கு டியூப் வழியாக நீரேற்ற கரைசல், அன்டிபயோடிக்ஸ் மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகள் வழங்கப்பட்டது.'' என தெரிவித்துள்ளனர்.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்!












Click it and Unblock the Notifications