தாய்லாந்தில் புலியுடன் செல்ஃபி எடுக்க ஆசை.. இந்திய சுற்றுலா பயணி வயிற்றில் கை வைத்ததுமே.. பாருங்க
பாங்காங்: தாய்லாந்து நாடு இந்திய சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லும் சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு கட்டமைப்புகளை அந்த நாடு ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான ஜூவில் ஆடிப்போக வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்ற போது புலியால் தாக்கப்பட்டிருக்கிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாய்லாந்தில் ஃபூகெட் மாகாணம் தெற்கு தாய்லாந்தில் அமைந்திருக்கிறது. இது தாய்லாந்தின் மிகப்பெரிய தீவாகும். அந்தமான் கடலில் அமைந்திருக்கிறது. ஃபூகெட்டில் சீன மொழி பேசும் மக்கள் மிக அதிகம் ஆகும். இங்கு ஏராளமான சீன ஆலயங்கள் மற்றும் சீன உணவகங்கள் உள்ளன. இங்கு ஃபூகெட் ரவாய், படோங், கரோன், கமலா, கட்டா யாய், கட்டா நொய் மற்றும் மை காவோ போன்ற பல அற்புதமான கடற்கரைகள் உள்ளன. , கூம் உணவகங்கள் இங்கு வரும் மக்களுக்கு பிடித்த இடமாக உள்ளது.

சுற்றுலா பயணிகள்
ஃபூகெட்டில் வன உயிரியல் பூங்காவில் புலியுடன் பார்வையாளர்களை செல்பி எடுக்க பூங்கா ஊழியர்கள் அனுமதிக்கிறார்கள். பூங்கா ஊழியர்களின் பேச்சை கேட்டு நாய் குட்டி போல் நடந்து வரும் புலிகள், சுற்றுலா பயணிகளை ஒன்றும் செய்யாது. இதனால் பல சுற்றுலா பயணிகள் விலங்குகளுடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் இந்திய சுற்றுலா பயணி ஒருவர் புலியுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளார். அவருக்கு நடந்தது பற்றி பார்ப்போம்.
ஃபூகெட் புலி
ஃபூகெட்டில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் உள்ள புலியை கூண்டில் இருந்து திறந்த பயிற்சியாளர், அதனை இந்திய சுற்றுலா பயணியுடன் அனுப்புகிறார். அவர் புலியின் கழுத்தில் உள்ள செயினை பிடித்தபடி நடந்து வருகிறார். பயிற்சியாளரும் உடன் வருகிறார். அப்போது இந்திய சுற்றுலா பயணி, திடீரென புலிக்கு பக்கத்தில் அமர்ந்து செல்பி எடுக்க முயன்றார். இதை பார்த்த புலி கோபம் அடைந்து அவரை கடித்து குதற தொடங்கியது. புலி தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரது நிலை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை..
செல்ஃபி எடுக்க முயன்ற வீடியோ
இந்த வீடியோவை sidhshuk என்ற பயனர் X தளத்தில் மே 29 தேதி பதிவிட்டார். அதில் அவர் கூறுகையில், "தாய்லாந்தில் ஒரு இந்திய சுற்றுலா பயணி புலியால் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது. புலிகளை செல்லப்பிராணிகளாக வைத்திருக்கும் இடங்களில் இதுவும் ஒன்று, இங்கு மக்கள் புலியுடன் செல்ஃபி எடுக்கலாம், உணவளிக்கலாம்" என்று கூறியிருந்தார்.
Apparently an Indian man attacked by a tiger in Thailand.
— Sidharth Shukla (@sidhshuk) May 29, 2025
This is one of those paces where they keep tigers like pets and people can take selfies, feed them etc etc.#Indians #tigers #thailand #AnimalAbuse pic.twitter.com/7Scx5eOSB4
சுற்றுலா பயணிக்கு என்னாச்சு
இந்த வீடியோ பதிவேற்றப்பட்ட சில மணி நேரங்களுக்குள், இந்த வீடியோ 1.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 5,000 க்கும் மேற்படடோர் லைக்கும் செய்துள்ளர். இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோவிற்கு ஆன்லைனில் கடும் எதிர்வினைகளும் வந்துள்ளன. பல நெட்டிசன் குறிப்பிட்ட இந்திய சுற்றுலா பயணிக்கு என்னாச்சு, அவரது நிலைபற்றி சொல்லுங்கள் என கவலை தெரிவித்தனர். இன்னும் சில சுற்றுலா பயணிகள் , காட்டு விலங்குகளைஇப்படி நடத்துவதால், அவை சில நேரங்களில் எதிர்வினை ஆற்றுவதாக கூறினார்கள். என்ன தான் , புலி , யானைகளை செல்லப்பிராணியாக வளர்த்தாலும், ஒரு நாள் கோபப்பட்டு முரட்டு தனமாக நடக்க வாய்ப்பு உள்ளது.

வயிற்றில் கை வைத்தால் பிடிக்காது
பொதுவாக புலியின் உயரத்திற்கு கீழ் மனிதன் தோன்றும் அளவிற்கு இருந்தால், புலி தாக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் நெட்டிசன்கள். மேலும் புலியின் வயிற்றை இந்திய சுற்றுலா பயணி தொட்டுள்ளார். அதுவும் புலியை கோபப்படுத்தி இருக்கும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
அதேநேரம் இதுபோன்ற வனவிலங்கு சுற்றுலா நடவடிக்கைகளை அதிகாரிகள் இன்னும் கடுமையாக விசாரித்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை நெட்டிசன்கள் வைத்துள்ளனர்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications