வால்பாறை டூ சாலக்குடி.. பயணம் செய்ய முடியாது .. கேரள வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலை தொடர் மலை காரணமாக பழுதடைந்துள்ளது. இதனால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. முழுமையாக சாலை சீரமைக்கப்பட்டவுடன் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று கேரள வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை மிகச்சிறந்த சுற்றுலா தலம் ஆகும். இயற்கையான சுற்றுலா தலமான வால்பாறைக்கு இரண்டு வழிகள் உள்ளன. பொள்ளாச்சியில் இருந்து ஒருவழியும், கேரளாவில் இருந்து சாலக்குடி வழியாக இன்னொரு வழியும் இருக்கிறது. இதல் மேற்கு தொடர்ச்சி மலையில், வால்பாறை முதல் சாலக்குடி வரையிலான தூரம் சுமார் 100 முதல் 110 கிலோ மீட்டர் வரை, அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது.

ஏராளமான வனவிலங்குகள் உள்ள இந்த சாலையில், ஏராளமான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த சாலையில் வால்பாறையில் இருந்து சாலக்குடி செல் சுமார் 4மணி நேரம் வரை ஆகிறது. இந்த சாலையில் மலக்கப்பறை தவிர வேறு இடங்களில் உணவகங்களோ அல்லது தங்கும் வசதிகளோ அதிகம் இருக்காது. இந்த சாலை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தான சாலையாக இருக்கிறது. இந்நிலையில் வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலை அண்மையில் பெய்த தொடர் மலை காரணமாக பழுதடைந்துள்ளது. இதனால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது
வனத்துறையினர் கூறுகையில் வால்பாறை சாலக்குடி சாலையில் ஆனைக்காயம் அருகில் ஒரு வளைவில் மழையின் காரணமாக விரிசல் விழுந்து பாலம் சேதம் அடைந்துள்ளனர். இதனால் வால்பாறையில் இருந்து சோலையார் அணை வழியாக சாலக்குடி செல்ல, வேன், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு கேரளா வனத்துறையினர் அனுமதி இல்லை என அறிவித்துள்ளனர்.
மேலும் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணி இன்று முதல் தொடங்க உள்ளது என்றும் வால்பாறையில் இருந்து சோலையார் அணைக்கு வழியாக சாலக்குடி செல்லும் அனைத்து வாகனங்களும் வாளைச்சால் வனத்துறை சோதனை நிறுத்தப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
என்ன பிரச்சனை
வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் யானைக்கயம் என்ற பகுதியில் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி பாலம் இடிந்து விழுந்தது. அந்த வழியாகச் செல்லும் வாகனங்களை நிறுத்தப்பட்டன.பெரும் சிரமங்களுக்கு பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
இதையடுத்து சம்பவ இடத்தை ஆய்வு செய்த கேரள மாநிலத்தின் திருச்சூா் மாவட்ட ஆட்சியா், இடிந்த பாலம் மற்றும் சாலை கட்டுமானப் பணிகளை நவம்பா் 10-ஆம் தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் இணை சாலை அமைப்பதற்காக மரங்களை வெட்டவும், சாலை கட்டுமானத்துக்குத் தேவையான பொருள்கள் மற்றும் இயந்திரங்களை கொண்டு வந்து அப்பகுதியில் வைக்க வனத் துறையிடம் அனுமதி பெறாவில்லை.. இதனால் பொதுப்பணித் துறையால் கட்டுமானத்தை உடனடியாகத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பொது போக்குவரத்து உள்பட அவ்வழியாகச் செல்ல வேண்டிய அனைத்து வாகனங்களும் வனத் துறையின் வாழைசால் சோதனைச் சாவடி வரை மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் மழுக்குப்பாறை சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் இந்தப் பகுதியில் பாலம் மற்றும் சாலை கட்டுமானப் பணிகள் இன்று முதல் தொடங்கி உள்ளது. இதையடுத்துபோக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பணி விரைந்து முடிந்து அடுத்த 15 நாள்களுக்குள் இந்த வழியில் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications