Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வால்பாறை டூ சாலக்குடி.. பயணம் செய்ய முடியாது .. கேரள வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலை தொடர் மலை காரணமாக பழுதடைந்துள்ளது. இதனால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. முழுமையாக சாலை சீரமைக்கப்பட்டவுடன் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று கேரள வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை மிகச்சிறந்த சுற்றுலா தலம் ஆகும். இயற்கையான சுற்றுலா தலமான வால்பாறைக்கு இரண்டு வழிகள் உள்ளன. பொள்ளாச்சியில் இருந்து ஒருவழியும், கேரளாவில் இருந்து சாலக்குடி வழியாக இன்னொரு வழியும் இருக்கிறது. இதல் மேற்கு தொடர்ச்சி மலையில், வால்பாறை முதல் சாலக்குடி வரையிலான தூரம் சுமார் 100 முதல் 110 கிலோ மீட்டர் வரை, அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது.

Work to repair the Valparai-Salakkudi road has begun due to incessant rains in the Western Ghats

ஏராளமான வனவிலங்குகள் உள்ள இந்த சாலையில், ஏராளமான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த சாலையில் வால்பாறையில் இருந்து சாலக்குடி செல் சுமார் 4மணி நேரம் வரை ஆகிறது. இந்த சாலையில் மலக்கப்பறை தவிர வேறு இடங்களில் உணவகங்களோ அல்லது தங்கும் வசதிகளோ அதிகம் இருக்காது. இந்த சாலை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தான சாலையாக இருக்கிறது. இந்நிலையில் வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலை அண்மையில் பெய்த தொடர் மலை காரணமாக பழுதடைந்துள்ளது. இதனால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது

வனத்துறையினர் கூறுகையில் வால்பாறை சாலக்குடி சாலையில் ஆனைக்காயம் அருகில் ஒரு வளைவில் மழையின் காரணமாக விரிசல் விழுந்து பாலம் சேதம் அடைந்துள்ளனர். இதனால் வால்பாறையில் இருந்து சோலையார் அணை வழியாக சாலக்குடி செல்ல, வேன், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு கேரளா வனத்துறையினர் அனுமதி இல்லை என அறிவித்துள்ளனர்.

மேலும் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணி இன்று முதல் தொடங்க உள்ளது என்றும் வால்பாறையில் இருந்து சோலையார் அணைக்கு வழியாக சாலக்குடி செல்லும் அனைத்து வாகனங்களும் வாளைச்சால் வனத்துறை சோதனை நிறுத்தப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

என்ன பிரச்சனை

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் யானைக்கயம் என்ற பகுதியில் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி பாலம் இடிந்து விழுந்தது. அந்த வழியாகச் செல்லும் வாகனங்களை நிறுத்தப்பட்டன.பெரும் சிரமங்களுக்கு பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

இதையடுத்து சம்பவ இடத்தை ஆய்வு செய்த கேரள மாநிலத்தின் திருச்சூா் மாவட்ட ஆட்சியா், இடிந்த பாலம் மற்றும் சாலை கட்டுமானப் பணிகளை நவம்பா் 10-ஆம் தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் இணை சாலை அமைப்பதற்காக மரங்களை வெட்டவும், சாலை கட்டுமானத்துக்குத் தேவையான பொருள்கள் மற்றும் இயந்திரங்களை கொண்டு வந்து அப்பகுதியில் வைக்க வனத் துறையிடம் அனுமதி பெறாவில்லை.. இதனால் பொதுப்பணித் துறையால் கட்டுமானத்தை உடனடியாகத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து பொது போக்குவரத்து உள்பட அவ்வழியாகச் செல்ல வேண்டிய அனைத்து வாகனங்களும் வனத் துறையின் வாழைசால் சோதனைச் சாவடி வரை மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் மழுக்குப்பாறை சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் இந்தப் பகுதியில் பாலம் மற்றும் சாலை கட்டுமானப் பணிகள் இன்று முதல் தொடங்கி உள்ளது. இதையடுத்துபோக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பணி விரைந்து முடிந்து அடுத்த 15 நாள்களுக்குள் இந்த வழியில் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+