அடுத்த 2 மணி நேரத்திற்கு.. 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! வேலையை காட்டத் தொடங்கியது பருவமழை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றும் நாளையும் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1 ஆம் தேதிதான் தொடங்கும். ஆனால் இந்த முறை மே மாதம் 30 ஆம் தேதியே தொடங்கிவிட்டது. இந்த பருவமழை இந்தியாவின் மொத்த மழைப்பொழிவில் 70%ஐ கொடுக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இன்று, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியிருந்தது.

Weather Rain


குறிப்பாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும், நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியிருந்தது.

மறுபுறம் வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்றும் கூறியிருந்தது. அதாவது, இன்று முதல் 30ம் தேதி வரை அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், தமிழகத்தில் ஒரிரு இடங்களில், 2* 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27"-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27"-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக தற்போது அடுத்த 2 மணி நேரத்திற்கான வானிலை அப்டேட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கிறது. அதில், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருப்பூர், விருதுநகர் என 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+