பிச்சு உதறும் கனமழை.. சென்னை, கோவை உட்பட 26 மாவட்டங்களில் 2 மணி நேரத்திற்கு மழை! வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மொத்தம் 26 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மட்டுமின்றி சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் அடுத்த 2 மணி நேரத்திற்கு நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பருவ மழை தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக இந்த பருவமழை சீசனில் மேற்குத் தொடர்ச்சி மழையை ஒட்டியிருக்கும் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

26 மாவட்டங்களில் மழை இருக்கு: அதேபோல சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் கூட மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை கொட்டி வருகிறது. இதற்கிடையே அடுத்த 2 மணி நேரத்திற்கு 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கலாம் என்றும் இதனால் டிராபிக் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை+ புறநகர்: அதேபோல இரவு 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
வானிலை மையம்: முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தினசரி செய்தி குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன முதல் அதி கனமழையும்: கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
கொட்ட போகுது மழை: நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. ஜூலை 20 முதல் ஜூலை 24 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications