Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 நாள் கழிச்சு என் வீட்டுக்கு போறேன்.. அங்க எனக்காக ஒருத்தன் காத்துகிட்டு இருப்பான்! நடிகர் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கங்கள் முடிந்து 3 நாட்கள் கழித்து எனது வீட்டிற்கு செல்ல போவதாக சின்னத்திரை நடிகரும் பாக்கியலட்சுமி புகழ் கோபி கதாபாத்திரமுமான சதீஷ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னை வழியாக ஆந்திராவுக்கு சென்ற மிக்ஜாம் புயல் போகும் போது வடதமிழகத்தை உலுக்கிவிட்டு சென்றது. காற்று குறைந்த அளவை கொடுத்துவிட்டு அதீத கனமழையை கொடுத்தது இந்த புயல்

Actor Sathish says that he is going to his office after Michaung

சென்னையில் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த மழையின் அளவு 400 மி.மீ. என பதிவாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தை போல் சென்னையே மிதந்து வருகிறது. புயலும் மழையும் நின்ற நிலையிலும் ஆங்காங்கே மீட்பு பணிகள் இன்னமும் நடந்து கொண்டுதான் வருகின்றன.

கழுத்தளவு நீர், 15 அடி நீரில் மக்கள் தத்தளித்து வருகிறார்கள். கழுத்தளவு நீரில் தாமாக வெளியே வருவது எல்லாம் ஆபத்தையே கொடுக்கும் என்பதால் பலர் வெளியேறாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்கள். பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டியுள்ளது.

வெள்ள புயல் நிவாரணமாக முதற்கட்டமாக ரூ 4500 கோடியை வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த வெள்ளம் பிரபலங்களையும் விடவில்லை. நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட இல்லத்தை வெள்ளம் சூழ்ந்தது. அது போல் அங்குள்ள நடிகை கஸ்தூரியின் வீட்டையும் வெள்ளம் சூழ்ந்துவிட்டது.

Actor Sathish says that he is going to his office after Michaung

நடிகர் மன்சூர் அலிகான் வீட்டை வெள்ளம் சூழ்ந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து மீன்கள் வருவதாகவும் தெரிவித்திருந்தார். நடிகர் விஷாலின் அண்ணாநகர் வீட்டை சுற்றியும் வெள்ளம் சூழ்ந்தது. இந்த நிலையில் ஹாரிஸ் ஜெயராஜின் வளசரவாக்கம் வீட்டையும் வெள்ளம் சூழ்ந்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகர் சதீஷும் வெள்ளத்தில் சிக்கியுள்ளார். இதனால் அவர் 3 நாட்களாக அக்கா வீட்டில் தங்கிவிட்டு தற்போது தான் தனது வீட்டிற்கு செல்ல போவதாக சதீஷ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். வீட்டில் மின்சாரம் வந்துவிட்டதால் தற்போது வீட்டிற்கு செல்கிறார். என் வீட்டில் காகம், நாய்க் குட்டி, கொசுவெல்லாம் எனக்காக காத்திருக்கும். தேங்காய் எண்ணெய்யை தடவினால் கொசு கிட்டயே வராது என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+