‛‛புதுஅலர்ட்’’.. அடுத்த 2 மணிநேரம் முக்கியம்! 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. உங்கள் ஊர் இருக்கா?
சென்னை: தமிழ்நாட்டில் பொங்கலை ஒட்டி பருவமழை முடிவுக்கு வந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு வழக்கமாக தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் போதுமான அளவு மழையை கொடுக்கும். ஜூன் முதல் வாரத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழையானது, தென்னிந்தியா முழுவதும் 80 சதவிகித மழையை கொடுக்கும். ஆனால் இந்த முறை இது பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. போதிய மழை இல்லாததால் கேரளா சற்று தடுமாறியது. அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவும் குறைந்ததால், மின் பற்றாக்குறை ஏற்பட்டது.

அதேபோல கர்நாடக மாநிலத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் கிருஷ்ண ராஜ சாகர் உள்ளிட்ட அணைகளுக்கு போதுமான அளவு நீர் வரவில்லை. எனவே அங்கிருந்து மேட்டூருக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது. இது தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களை பாதித்தது. ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றன.
கேரளா, கர்நாடகாவை ஒப்பிடும்போது தமிழ்நாட்டை பொறுத்த அளவில் அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் ஓரளவு போதுமான அளவு மழையை தென்மேற்கு பருவமழை கொடுத்தது.
இதனை தொடர்ந்து வந்த வடகிழக்கு பருவமழை, தொடக்கம் முதலேயே அதிரடியாக மழையை கொடுத்தது. தமிழ்நாட்டில் மேட்டூர் தவிர ஏறத்தாழ அனைத்து நீர் நிலைகளும் இந்த மழை காரணமாக நிரம்பிவிட்டன. தென் தமிழகத்தில் ஒரே நாளில் அதிக அளவு மழை பெய்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையுடன் வடகிழக்கு பருவமழை விலகிக்கொண்டிருக்கிறது.
எனவே தமிழ்நாடு முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. பெரும்பாலான இடங்களில் கடும் குளிரும், பனி மூட்டம் நிலவுகிறது. உதகையில் உறைபனிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. அதாவது, காலை 10 மணிக்குள் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications