Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையே பூரிக்குது.. செம்பரம்பாக்கத்துக்கு போன நியூஸ்.. புழல் தரும் நற்செய்தி.. என்னன்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

தமிழகத்தில் மழைப்பொழிவு பெருகி வருகிறது.. இன்னும் அடுத்தடுத்த நாட்களுக்கு மழை அதிகமாகவே இருக்கும் என்றும் அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

Chembarambakkam puzhal, Cholavaram lakes water inflow increased in Chennai District

நிரம்பும் ஏரிகள்: இன்றைய தினம், தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.

அதன்படி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மாநிலம் முழுவதும் மழைப்பொழிவு அதிகமாக உள்ள நிலையில், அதற்கேற்ற முன்னேற்பாடுகளிலும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.

மற்றொருபக்கம், குடிநீர் ஆதாரமும் பெருகி வருகிறது.. குறிப்பாக, சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

5 ஏரிகள்: இந்த 5 ஏரிகளிலுமே, கிட்டத்தட்ட 11,757 மி.கனஅடி தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.. அந்தவகையில், இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் மொத்தம் 8895 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளவில் 75 சதவீதமாகும்..

இப்பாது, பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டிவருகிறது.. அந்தவகையில், கடந்த 3 நாட்களாகவே மழை அதிகரித்து, ஏரிகளிலும் குடிநீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 436மி.கனஅடிதண்ணீர் உள்ளது. இப்போது ஏரிக்கு 20 கனஅடி தண்ணீர் வருவதால், 10 கனஅடி கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடியாக உள்ள நிலையில், 1874 மி.கனஅடி தண்ணீர் தற்போது உள்ளது.. 210 கனஅடி தண்ணீர் வருவதால், 68 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது..

புழல் ஏரி: புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடியாக உள்ள நிலையில், இப்போதைக்கு 2755 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. எனவே, 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோல, சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1080 மி.கனஅடியாக உள்ள நிலையில், 692மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடியாக உள்ள நிலையில், 3138 மி.கனஅடி தண்ணீர் தற்போது உள்ளது. இன்று காலை நீர்வரத்து 451 கனஅடியாக அதிகரித்தது. எனவே, 162 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

பெருத்த நம்பிக்கை: ஆக, செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 22 அடியை நீர்மட்டம் மறுபடியும் எட்டியிருக்கிறது. இனி அடுத்தடுத்த நாட்களிலும், சென்னையில் மழை அதிகரிக்கும் என்பதால், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்.. குடிநீர் ஆதாரங்கள் அதிகரித்துள்ளதால், சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருக்காது என்றும் நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+