அப்செட் தரும் வானிலை நிலவரம்.. தமிழ்நாட்டில் இன்று வெயில் எப்படி இருக்கும்? மழை எப்போது பெய்யும்?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று வறண்ட வானிலை நிலவக் கூடும் என்றும், அதிகாலை பனிமூட்டத்துக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்கள் கோடை காலம் தொடங்க இருக்கும் சூழலில் தற்போதே கோடை காலத்தை நினைவூட்டும் வகையில் பல இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் அடுத்த 6 நாட்கள் தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும் என்று பார்ப்போம். இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் பிப்ரவரி 6 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 7 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.

ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. பிப்ரவரி 8 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 9 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். பிப்ரவரி 10 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 11 ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக் கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.
பிப்ரவரி 12 ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன் அறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை 31 - 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்ப நிலை 22 - 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டி மீட்டரில்): ஏதுமில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.” என்று குறிப்பிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications