சென்னை உட்பட.. 9 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! வானிலை மையம் வார்னிங்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் கடந்த அக்.1ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை, போதுமான அளவுக்கு மழைப்பொழிவை கொடுக்கவில்லை. இந்நிலையில் மதியம் 12 மணி வரை சென்னை தொடங்கி 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் திருப்பூர் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.













Click it and Unblock the Notifications