டிட்வா புயல்.. இலங்கையில் பலி எண்ணிக்கை 191ஆக அதிகரிப்பு.. மரத்தில் ஏறி உயிருக்கு போராடியவர் மீட்பு!
கொழும்பு: இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 159ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் காணாமல் போனோர் எண்ணிக்கை 191ஆக அதிகரித்துள்ளது. இந்த புயலால் சுமார் 7.74 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது.
வங்ககடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக இலங்கை முழுவதும் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இலங்கை வரலாறு காணாத மழை, மண்சரிவு காரணமாக நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்வதாக அந்நாட்டு அதிபர் அநுர குமார் திசநாயக அறிவித்திருக்கிறார். இதையடுத்து போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 159ஆக உள்ளது. அதேபோல் காணாமல் போனோரின் எண்ணிக்கை 191ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த புயலால் 7.74 லட்சம் மக்கள் மிகப்பெரிய பாதிப்புகளை சந்தித்துள்ளனர். அதேபோல் கண்டி மற்றும் பதுளை மாகாணங்களில் மட்டும் 52 பேர் உயிரிழந்தனர்.
சுமார் 21 மாகாணங்கள் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், ஏராளமான வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. சில வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. அதேபோல் மின்சாரம், விமானம், ரயில், பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கி போய் இருக்கின்றன. செல்ஃபோன் சேவைகளும் பாதிப்பை சந்தித்துள்ளது.
இதனிடையே இலங்கையின் அநுராதபுரம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து தப்பிக்க ஒருவர் மரத்தில் ஏறி நீண்ட நேரம் போராடி இருக்கிறார். அந்த நபரை ஹெலிகாப்டரில் வந்து விமானப் படை வீரர்கள் காப்பாற்றி அழைத்து சென்றனர். இதன் வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. மறுபக்கம் இலங்கையின் தியபெதும பகுதியில் வெள்ளத்தால் வீட்டில் 3 பேர் சிக்கினர்.
ஒரு பெண் மற்றும் இரு சிறுமிகள் சிக்கி இருப்பது தெரிய வர, உடனடியாக அங்கு சென்ற இலங்கை விமானப் படை வீரர்கள் மீட்டுள்ளனர். அதேபோல் மீட்பு பணிகளுக்காக இந்திய பேரிடர் மீட்பு படையும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் இருந்து நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications