ருத்ரதாண்டவமாடிய மிக்ஜாம்: சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை!
சென்னை: மிக்ஜாம் புயல் மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் நிலை கொண்ட மிக்ஜாம் புயல் சென்னைக்கு மிக அருகே 30 மணி நேரம் நீடித்து நின்றது. இதனால் சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு பெருமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, புறநகரில் 35 மணி நேரத்தில் 43 செ.மீ மழை பெய்து பேயாட்டம் போட்டது.

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்தது. அனைத்து தனியார் அலுவலகங்களையும் மூடவும் உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு.
தற்போது மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 190 கிமீ தொலைவு விலகி ஆந்திராவில் இன்று கரையைக் கடக்க இருக்கிறது. இருந்த போதும் சென்னையில் மிக்ஜாம் புயல் மழை வெள்ள பாதிப்பு நீடிக்கிறது.
இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் முன்னெச்சரிக்கையாக இன்றும் 2-வது நாளாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம், அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் எந்த பாதிப்பும் இருக்காது எனவும் அரசு தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications