Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்க கடலில் ஹாமூன் புயல்! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகிறது- 9 துறைமுகங்களில் புயல் கூண்டுகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியான மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழ்நாட்டின் 9 துறைமுகங்களில்1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.

நாட்டின் வடகிழக்கு பருவமழை நேற்று சனிக்கிழமை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அரபிக் கடலில் மையம் கொண்டிருக்கும் தேஜ் புயல் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம் நிலவியது.

Depression over Bay of Bengal Likely to further intensify into a deep depression

தேஜ் புயல்: ஆனால் தேஜ் புயல் தற்போது, தென்மேற்கு அரபிக் கடலில் வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது அக்டோபர் 22 (இன்று) மாலைக்குள் அதிதீவிர புயலாக உருமாறும். ஏமன் (யேமன்) நாட்டின் சொகோட்ராவில் இருந்து 380 கி.மீ. தொலைவிலும் ஓமனின் சலாலாவின் தெற்கு- தென்கிழக்கில் 730 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: இதனிடையே தென்கிழக்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தென்மேற்கு- தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து மத்திய மேற்கு வங்கக் கடற்பரப்பில் அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகிறது. இது நாளை அல்லது மறுநாள் புயலாக வலுவடையக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Depression over Bay of Bengal Likely to further intensify into a deep depression

எங்கே இருக்கிறது?: மேற்கு மத்திய வங்க கடலில் ஒடிஷாவின் பாரதீப்புக்கு தெற்கே 610 கி.மீ. தொலைவிலும் மேற்கு வங்கத்தின் டிகாவுக்கு தெற்கே 760 கி.மீ. தொலைவிலும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டிருக்கிறது.

ஹாமூன் புயல்: வங்க கடலில் புதியதாக உருவாகும் புயலுக்கு ஹாமூன் என பெயரிடப்பட இருக்கிறது. இந்த புயலானது அடுத்த 3 நாட்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம்- வங்கதேசம் இடையே கரையைக் கடக்கக் கூடும் எனவும் கணிக்கப்பட்டு வருகிறது. ஹாமூன் புயலால் சென்னை உள்ளிட்ட வட தமிழகம் கன மழையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. ஆந்திரா, ஒடிஷாவில் தசரா/ நவராத்திரி கொண்டாட்டங்களை ஹாமூன் புயல் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் அக்டோபர் 24-ந் தேதி வரை இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

8 மாவட்டங்களில் கனமழை: இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

9 துறைமுகங்களில்.. : மேலும் தமிழ்நாட்டின் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகளை ஏற்றவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து சென்னை உட்பட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+