Heavy Rain: அடுத்த 2 மணி நேரம்.. விடாமல் வெளுக்க போகும் மழை.. கோவை - குமரி வரை 11 மாவட்டங்களுக்கு அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில், கோவை முதல் குமரி வரை 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, கோவை, நீலகிரி, திண்டுக்கல், சிவகங்கை என 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தால் மதிய நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் செல்லவே பலரும் யோசிக்கின்றனர். உக்கிரம் காட்டும் வெயிலுக்கு மத்தியில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. நேற்று நெல்லை, குமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை நேரத்தில் மழை பெய்தது. இன்றும் பகலில் உக்கிரம் காட்டிய வெயில் மாலையில் அப்படியே தணிந்துள்ளது.

அடுத்த 2 மணி நேரம்..
கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டு வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அடுத்த 2 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) தமிழகத்தில் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும். இதனால் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்க வாய்ப்பு உள்ளது" என்று கூறியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பாதை
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- "சுமார் 0.9 கிமீ உயரத்தில், வடக்கு தெலுங்கானா முதல் குமரிக்கடல் வரை உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதனால், இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு சான்ஸ்
நாளை 29 ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப்பகுதிகளில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
30 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
கோவையில் கனமழை பெய்யும்
வரும் 1 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
2 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்" என்று கூறப்பட்டிருந்தது.














Click it and Unblock the Notifications