பகலில் வாட்டி வதைத்த வெயில்.. இரவில் கொட்டிய கனமழை.. சென்னையை குளிர்வித்த வருண பகவான்
சென்னை: சென்னையில் இன்று பகலில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்த நிலையில் இரவில் கிளைமேட் அப்படியே தலைகீழாக மாறியது. இரவு 10 மணிக்கு மேல் சென்னையில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
சென்னை உள்பட தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சென்னையில் இரவு நேரத்தில் மழை பெய்தது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

சென்னையில் இன்று பகலில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. இதனால், பகல் வேளையில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டனர். இந்த நிலையில், இரவு 10 மணிக்கு மேல் திடிரென்று கனமழை கொட்ட தொடங்கியது. இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னை எழும்பூர், சென்ட்ரல், கோயம்பேடு, அமைந்தகரை, அண்ணாநகர், கிண்டி, ஈக்காட்டு தாங்கல், வடபழனி, முகப்பேறு என பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீரும் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையமும் சென்னையில் இரவு மழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பகல் நேரங்களில் சென்னையில் வெயில் கொளுத்தி எடுத்த நிலையில் இரவு நிலைமை அப்படியெ தலைகீழாக மாறி பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.












Click it and Unblock the Notifications