சென்னையில் வெளுத்தெடுத்த 'நள்ளிரவு 6 செ.மீ மழை'.. விமான சேவைகள் பாதிப்பு- பயணிகள் துயரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நள்ளிரவில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் பெய்த திடீர் கனமழையால் 16 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.

தமிழ்நாட்டில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக பல மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை மாநகரில் நேற்று இரவே மழை பெய்ய தொடங்கியது. சென்னையில் நள்ளிரவில் கனமழை கொட்டித் தீர்த்தது.

Heavy rain lashes Chennai, 16 flights operations affected

ஆவடியில் கடந்த 24 மணிநேரத்தில் 8 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. மேற்கு தாம்பரத்தில் 6.2 செ.மீ. மழை பதிவானது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 6.1 செ.மீ மழையும் மீனம்பாக்கத்தில் 5.6 செ.மீ. மழையும் பதிவானது.

சென்னையில் பெய்த திடீர் கனமழையால் சர்வதேச விமான சேவைகள் உட்பட மொத்தம் 16 விமான சேவைகள் பாதிப்புக்குள்ளாகின. ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து 64 பயணிகளுடன் வந்த பயணிகள் விமானம், சென்னையில் கனமழையால் தரையிறங்க முடியவில்லை. இதனையடுத்து அந்த விமானம் 64 பயணிகளுடன் திருச்சிக்கு திருப்பிவிடப்பட்டது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் நீர்இருப்பு 1866 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை மாநகர குடிநீருக்காக 159 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+