நைட் முழுக்க கொட்டப் போகுது மழை.. கோவை டூ குமரி வரை 14 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நெல்லை, தென்காசியில் இன்று பல்வேறு இடங்களில் காலை முதல் மாலை வரை மழை விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், தற்போது இன்று இரவு 10 மணி வரையும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நெல்லை, குமரி, தென்காசி, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி என பல்வேறு மாவட்டங்களிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று காலையில் இருந்தே நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வந்தது.

பலத்த காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருவதால் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மின் கம்பங்கள், மரங்கள் சாலைகளில் சாய்ந்து விழுந்து கிடந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது குறித்து வானிலை மையம் கூறியுள்ளதாவது:- தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்பட 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications