கனமழை, வெள்ளம்.. விழுப்புரம், கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆட்சியர்கள் அறிவிப்பு
சென்னை: விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விழுப்புரம், கடலூரில் நாளை செவ்வாய்க்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளம் காரணமாகவும், மழைநீர் வடியாததன் காரணமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
திருவண்ணாமலை, சேலம் மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. திருவண்ணாமலை, கடலூர், திண்டிவனம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல இடங்களில் வெள்ளம் போல் மழை நீர் தேங்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அணைகள், குளங்களில் தண்ணீர் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வயல், நகர், கிராமங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. பலரது வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. தொடர்ந்து துணை ராணுவ படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழக அரசும் பல்வேறு மீட்பு பணிகளை செய்து வருகிறது. தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடலூரில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கனமழை, வெள்ளம் காரணமாகவும், மழைநீர் வடியாததன் காரணமாகவும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வடியாததாலும், தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று திருவண்ணாமலை மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார். இதேபோன்று சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு தாலுகாக்களுக்கு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் சரயு அறிவித்துள்ளார். அதாவது கிருஷ்ணகிரியில் ஊத்தங்கரை, போச்சாம்பள்ளி தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிற மாவட்டங்களில் பள்ளிகள் முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் முடிவு எடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications