8 மணி நேரத்தில் 18 செமீ மழை.. வெள்ளக்காடாக மாறிய மும்பை.. இன்றும் கனமழை எச்சரிக்கை
மும்பை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று மட்டும் 8 மணி நேரத்தில் 18 செமீ மழை பெய்ததால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறியது. இதனால் விமான சேவை, ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. மழை வெள்ளத்திற்கு 7 பேர் பலியானதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இன்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக மும்பையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளாவில் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவிலும் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்தது. குறிப்பாக நேற்றும், நேற்று முன் தினமும் மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர்ச்சியாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று ஒரே நாளில் அதிகாலை முதல் மதியம் வரையிலான 8 மணி நேரத்தில், 18 செமீ அளவுக்கு தலைநகர் மும்பையில் மழை கொட்டியதால், பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறின. ரயில் நிலையங்களில் தண்டவாளம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் ரயில்கள் 10 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதேபோல் விமான நிலையங்கள் ஓடுபாதையிலும் தண்ணீர் தேங்கியதால் நேற்று விமான சேவை பாதிக்கப்பட்டது.
சாலைகளும் தண்ணீரில் மூழ்கியதால் பஸ் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக அந்தேரி சுரங்கப்பாதை மூடப்பட்டது. சாலைகள் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதனால் வாகனங்கள் மிதந்தபடி சென்றதை பார்க்க முடிந்தது. பல இடங்களில் பஸ்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டன.
மும்பை கிழக்கு, மேற்கு விரைவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மழை வெள்ளத்திற்கு 7 பேர் பலியானதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இன்றும் மும்பை, பால்கர், தானே, ராய்காட் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications