லிஸ்ட்டில் 9 மாவட்டங்கள்.. காலை 10 மணி வரை மழை கொட்டும்.. வானிலை மையம் தந்த முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் என நாம் அனைவரும் நினைத்தோம். இதற்கு முக்கிய காரணம் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்ப அலையுடன் வெயிலின் தாக்கம் அதிகரித்தது தான்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 28 ம் தேதி வரை நீடிக்கும் என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய கோடை மழையால் கத்திரி வெயிலில் இருந்து நாம் தப்பித்து விட்டோம்.
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மிதமானது முதல் கனமழை வரை மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மழை இல்லாவிட்டாலும் கூட வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டம் காணப்படுகிறது. மேலும் நேற்றைய தினம் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில் தான் இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் இடி, மின்னல் கூட இருக்கலாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி காலை 10 மணி வரை தூத்துக்குடி, ராமநாதபுரம் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications