Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரி காட்டாற்று வெள்ளம்.. மாணவர்களை காப்பாற்றிய பழங்குடி மக்கள்.. பள்ளிகளுக்கு விடுமுறை

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கடந்த சில நாட்களாகவே கன்னியாகுமரியில் மழை வெளுத்து வாங்கி வரும்நிலையில், இன்றைய தினமும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது.. ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது. நேற்றைய தினமும் நல்ல மழை தமிழகத்தில் பெய்தது.

kanniyakumari weather

கனமழை: இந்நிலையில், மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான, 'டானா' புயல், படிப்படியாக வலுவடைந்து, தீவிர புயலாக மாறியுள்ளது. இது, வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா -மேற்கு வங்காளம் இடையே, புரி - சாகர் தீவுகளுக்கு இடையில், இன்று காலை அதி தீவிர புயலாக கரையை கடந்திருக்கிறது.

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய, வளி மண்டல சுழற்சியானது அரபிக்கடல் நோக்கி நகர்ந்துள்ளது.. எனவே, தென்கிழக்கு அரபிக்கடல், அதை ஒட்டிய லட்சத்தீவு கடல் பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியதன் காரணமாக, தமிழகத்தில் குமரி உட்பட தமிழகத்தில் கனமழைக்கு இன்று வாய்ப்புள்ளதாக கூறி, 17 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

விடுமுறை: தொடர் கனமழை காரணமாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று அதாவது 25ம் தேதி ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரியில் நாளையும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே கன்னியாகுமரியில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இம்மாவட்டத்தில் பேச்சிப்பாறை, கோதையார், மோதிரமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து கொண்டிருக்கிறது..

பழங்குடி மக்கள்: இதனால், மலைப்பகுதியில் பழங்குடி மக்கள் வசிக்கும் கொலோஞ்சிமடம் பகுதியில் திடீரென காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓட துவங்கிவிட்டது.. இதனால், பள்ளி சென்று திரும்பிய மாணவ, மாணவியர் வீடு திரும்ப முடியாமல் மறுகரையில் சிக்கித்தவித்தனர்.. இதைப்பார்த்து பதறிய அந்த பகுதியை சேர்ந்த பழங்குடி மக்கள், மாணவர்களை மீட்டு பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தார்கள்.. இப்போதுகூட பேச்சிப்பாறை, கோதையார், மோதிரமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+