கோவை மேட்டுப்பாளையத்தில் ஒரே நாளில் மொத்தமாக கொட்டித் தீர்த்த அதி உச்ச கனமழை- 37 செ.மீ பதிவு!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஒரே நாளில் 37 செ.மீ மழை கொட்டித் தீர்த்துவிட்டிருக்கிறது. நடப்பு வடகிழக்கு பருவமழையில் அதி உச்சமான மழைப் பதிவு இது. நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியில் 24 செ.மீ, கவுந்தபாடியில் 15 செ.மீ மழையும் வெளுத்தெடுத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வெளுத்தெடுத்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. கனமழையால் 8 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

 Mettuapalayam records massive 373 mm rain in the last 24 hours.

கடந்த 24 மணிநேரத்தில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 37 செ.மீ அளவுக்கு அதி உச்ச கனமழை பதிவாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் தாலுகாவில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேலும் உதகை- மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலை ரயில் பாதை சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையில் நிலச்சரிவால் விழுந்த பாறைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதேபோல நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியில் 24 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. கவுந்தபாடியில் 15 செ.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+