Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீலகிரி மலையெல்லாம் மழை.. விடிய விடிய கொட்டி தீர்த்து.. இழுத்து மூடப்பட்ட ஊட்டி டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் இன்றைய தினமும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது. அதற்கேற்றவாறு விடிய விடிய நீலகிரியில் பெய்த மழையால், மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது..

நீலகிரி மாவட்டத்துக்கு 25 மற்றும் 26ம் தேதிகளில் அதாவது நேற்றும் இன்றும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.. இந்த ரெட் அலர்ட் நேற்று முன்தினமே வெளியான நிலையில், அனைத்துவிதமான ஆயத்த பணிகளுக்கும் நீலகிரி தயாரானது..

Nilgiris Red Alert Rain

சுற்றுலா பயணிகள்

கனமழை காரணமாக சுற்றுலா பயணிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.. ரெட் அலர்ட் என்பதால், மீட்பு படையினர் அனைத்து பகுதிகளிலும் தயார் நிலையில் இருந்தனர்.. தேவையின்றி யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் மாவட்ட மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர்.

நேற்றைய தினமே அனைத்து சுற்றுலா தலங்களும் மூடும்படி அறிவிப்பு வெளியானது.. தொட்டபெட்டா காட்சி முனை, பைன்பாரஸ்ட், அவலாஞ்சி, பைக்காரா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.. இதனால் ஏற்கனவே நீலகிரிக்கு சுற்றுலா வந்தவர்கள், எங்குமே செல்ல முடியாமல் ரூமிலேயே அடைபட்டு கிடந்தனர்..


நீலகிரியில் தொடரும் மழை

நீலகிரியில் நேற்று முன்தினம் முதல் பல இடங்களில் கனமழை பெய்தது. நேற்று 2-வது நாளாக ஊட்டி உள்பட பல இடங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது.. இரவெல்லாம் கொட்டி தீர்த்த கனமழை, இன்று காலை வரையில் விடிய விடிய பெய்தது..

குறிப்பாக கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 21 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. இனறு திங்கட்கிழமையும், அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்ததுடன், ரெட் அலர்ட் நீட்டிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்கள், ஊட்டி படகு இல்லம் இன்றைய தினமும் மூடப்பட்டுள்ளது.

மூடப்பட்ட சுற்றுலா தலங்கள்

பலத்த காற்று வீசுவதால் உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் ஆகியவை இன்றும் திறக்கப்படாது எனவும் தொட்டபெட்டா காட்சிமுனை, பைன் மரக்காடுகள், அவலாஞ்சி ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு இன்றும் அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, ஊட்டி தாவரவியல் பூங்காவும், ரோஜா பூங்காவும் இன்றும் மூடப்பட்டிருக்கிறது.. அதேபோல கூடலூர் ஊசி மலைக் காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டியை அடுத்த 8-வது மைல் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் சுற்றுலா வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவனது உடல் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.


மின்சாரம் பாதிப்பு

குன்னூர் கம்பி சோலை, கேத்தி, தலைக்குந்தா, தலையாட்டு மந்து, ஊட்டி படகு இல்லம் பகுதி, கோத்தகிரி உள்பட நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் உடனடியாக மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி விடுகிறார்கள்.

பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் கடுமையான குளிர் நிலவுகிறது. கடந்த 3 தினங்களாகவே பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

ஊட்டியில் 6 இடங்களில் மரங்கள் விழுந்த நிலையில் உடனுக்குடன் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. மின்சாரம் தொடர்பான பாதிப்பு இருந்தால் 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும். அவசர கால உதவிக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+