வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்க போகிறது! இந்த ஆண்டு மழை எப்படி இருக்கும்! வெதர்மேன் பிரத்யேக தகவல்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பது குறித்தும் இந்த ஆண்டு மழையின் தீவிரம் எப்படியிருக்கும் என்பது குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், ஒன் இந்தியாவுக்கு பிரத்யேக தகவல் அளித்துள்ளார்.
கேரளா, தமிழகத்தின் தென் மாவட்டங்கள், மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு பலனை கொடுக்கும் தென் மேற்கு பருவமழை ஜூலை மாதம் தொடங்கி கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்தது.

இந்த மழை விலகினால்தான் தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரா பகுதிகளுக்கு பலனை அளிக்கும் வடகிழக்கு பருவமழை பெய்யும். அந்த வகையில் தற்போது தென்மேற்கு பருவமழையும் விலகிய நிலையில் வடகிழக்கு பருவமழை எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த சீசனுக்காக சாதகமான சூழல் உருவாகினால், உடனே அந்த பருவமழை பெய்யத் தொடங்கிவிடும். எனினும் கீழக்கு, மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அது போல் மாலை 6 மணிக்கு மேல் குளிர்ச்சியான சூழலே நிலவுகிறது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு வெள்ளம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சூழ்ந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் தண்ணீர் சூழ்ந்து கொண்டு மக்கள் வெளியேற முடியாத நிலையில் இருந்தது.
பிறகு மழை படிப்படியாக குறைந்ததும் தண்ணீர் வெளியேறியது. இந்த காலகட்டத்தில் மக்கள் மின்சாரம், தண்ணீர், உணவு இல்லாமல் அவதியடைந்தனர். இந்த அச்சத்திலேயே இந்த ஆண்டு மழை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு லாலினோ ஆண்டு என்பதால் மழை அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அதிகமாகவே இருக்கும். தற்போது இந்த சீசன் வரும் அக்டோபர் 13 ஆம் தேதி தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை மையமும் இந்த ஆண்டு 2 ஆவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என தெரிவித்திருந்தது. இந்த பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தெரிவித்திருந்தது.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி












Click it and Unblock the Notifications