வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்க போகிறது! இந்த ஆண்டு மழை எப்படி இருக்கும்! வெதர்மேன் பிரத்யேக தகவல்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பது குறித்தும் இந்த ஆண்டு மழையின் தீவிரம் எப்படியிருக்கும் என்பது குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், ஒன் இந்தியாவுக்கு பிரத்யேக தகவல் அளித்துள்ளார்.
கேரளா, தமிழகத்தின் தென் மாவட்டங்கள், மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு பலனை கொடுக்கும் தென் மேற்கு பருவமழை ஜூலை மாதம் தொடங்கி கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்தது.

இந்த மழை விலகினால்தான் தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரா பகுதிகளுக்கு பலனை அளிக்கும் வடகிழக்கு பருவமழை பெய்யும். அந்த வகையில் தற்போது தென்மேற்கு பருவமழையும் விலகிய நிலையில் வடகிழக்கு பருவமழை எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த சீசனுக்காக சாதகமான சூழல் உருவாகினால், உடனே அந்த பருவமழை பெய்யத் தொடங்கிவிடும். எனினும் கீழக்கு, மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அது போல் மாலை 6 மணிக்கு மேல் குளிர்ச்சியான சூழலே நிலவுகிறது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு வெள்ளம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சூழ்ந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் தண்ணீர் சூழ்ந்து கொண்டு மக்கள் வெளியேற முடியாத நிலையில் இருந்தது.
பிறகு மழை படிப்படியாக குறைந்ததும் தண்ணீர் வெளியேறியது. இந்த காலகட்டத்தில் மக்கள் மின்சாரம், தண்ணீர், உணவு இல்லாமல் அவதியடைந்தனர். இந்த அச்சத்திலேயே இந்த ஆண்டு மழை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு லாலினோ ஆண்டு என்பதால் மழை அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அதிகமாகவே இருக்கும். தற்போது இந்த சீசன் வரும் அக்டோபர் 13 ஆம் தேதி தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை மையமும் இந்த ஆண்டு 2 ஆவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என தெரிவித்திருந்தது. இந்த பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தெரிவித்திருந்தது.












Click it and Unblock the Notifications