அடுத்த 3 மணி நேரம் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்.. கனமழை விட்டு விளாச போகுது! 22 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு மற்றும் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, சேலம், வேலூர், தூத்துக்குடி உள்பட 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்றைப் போலவே இன்றும் காலையிலேயே மழை பெய்ய தொடங்கியது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.

வானிலை மையமும் காலையிலேயே மழை அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை அறிவிப்பினை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இதேபோன்று தமிழகம் முழுக்க அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
வானிலை அறிவிப்பில், காலை 10 மணி வரை சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.
இதேபோன்று அரியலூர், திண்டுக்கல், நீலகிரி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், வேலூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications