நம்மள நோக்கித்தான் வருது.. அடுத்த 3 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை கொட்டும்.. வானிலை அலர்ட்!
சென்னை: அடுத்த 3 மணிநேரத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அலர்ட் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது மாலை 5.30 மணி வரை கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய ஆறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பூர், நீலகிரி, கோயமுத்தூர், நாமக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், செப்டம்பர் 1ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications