ருத்ரதாண்டவம் ஆடிய மழை.. மும்பையில் ஒரே நாளில் 20 செமீ மழை பதிவு.. கேரளாவில் இன்றும் ரெட் அலர்ட்
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், மலப்புரம், திருச்சூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
மும்பையில் நேற்று தான் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், அன்றைய தினம் ஒரு நாளில் 20 செமீ மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் இன்று தானே, ராய்காட், ரத்னகிரி ஆகிய 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. தமிழகம் ஆந்திரவை தவிர நாட்டின் பெரும்பாலானா மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையையே நம்பியுள்ளது.
கேரளாவில் 24 ஆம் தேதி பருவமழை தொடங்கிய நிலையில் அப்போதில் இருந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மும்பையில் நேற்று தான் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் தொடங்கிய முதல் நாளே மும்பையில் மட்டும் 20 செமீ மழை பதிவானது. மகாராஷ்டிராவின், மும்பை, தானே, ரத்னகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
மும்பையில் 107 ஆண்டுகளுக்கு பருவமழை தொடங்கியதும் இப்படி மழை பெய்துள்ளது. வழக்கமாக மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 11 ஆம் தேதி தொடங்கும். ஆனால் சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இவ்வளவு சீக்கிரமாக தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி தொடங்கிய முதல் நாளிலேயே மும்பை உள்பட மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் மும்பையில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் மகாராஷ்டிராவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், மகாராஷ்டிராவில் இன்று தானே, ராய்காட், ரத்னகிரி ஆகிய 3 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோல் கேரளாவில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவில் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், மலப்புரம், திருச்சூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கேரளாவில் மழை கொட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications