லீவு அறிவிப்பு வந்தாச்சு! கொட்டும் கனமழை.. நாளை நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
தென்காசி: கனமழை பெய்து வரும் நிலையில், நாளை தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், கனமழை எச்சரிக்கை இருப்பதால் கல்வி நிறுவனங்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் ஆட்சியர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே இப்போது தேனியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (13-12-2024) லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது.

இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. குறிப்பாகத் தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய நல்ல மழை பெய்தது.
நாளைய தினமும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதற்கிடையே தென்காசியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கனமழை எச்சரிக்கை இருப்பதால் கல்வி நிறுவனங்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்பதையும் மாவட்ட ஆட்சியர் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதேபோல நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு கல்வி நிறுவனமும் சிறப்பு வகுப்புகளை நாளை நடத்தக்கூடாது என்பதை மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளனர். மழை பாதிப்பு காரணமாகத் தேனியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் தேனியில் உள்ள கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
-
சவுதி வானில் அடுத்த அதிர்ச்சி! பீதியில் அஞ்சி ஓடும் பொதுமக்கள்! வளைகுடா நாட்டில் எதிர்பாராத பாதிப்பு -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications