லீவு அறிவிப்பு வந்தாச்சு! கொட்டும் கனமழை.. நாளை நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
தென்காசி: கனமழை பெய்து வரும் நிலையில், நாளை தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், கனமழை எச்சரிக்கை இருப்பதால் கல்வி நிறுவனங்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் ஆட்சியர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே இப்போது தேனியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (13-12-2024) லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது.

இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. குறிப்பாகத் தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய நல்ல மழை பெய்தது.
நாளைய தினமும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதற்கிடையே தென்காசியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கனமழை எச்சரிக்கை இருப்பதால் கல்வி நிறுவனங்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்பதையும் மாவட்ட ஆட்சியர் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதேபோல நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு கல்வி நிறுவனமும் சிறப்பு வகுப்புகளை நாளை நடத்தக்கூடாது என்பதை மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளனர். மழை பாதிப்பு காரணமாகத் தேனியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் தேனியில் உள்ள கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications