நெல்லை மாவட்டத்தை வெளுத்தெடுத்த அதிகனமழை.. இந்த ஏரியாவில் தான் மிக அதிக மழை! வெதர்மேன் அப்டேட்!
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 26 செ.மீ அதிகனமழை பதிவாகியுள்ளது. அம்பாசமுத்திரம் பகுதியில் கனமழை வெளுத்தெடுத்த நிலையில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று மதியம் நிலவரப்படி, அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், ஊத்து பகுதியில் 12 செ.மீ மழை பெய்திருந்தது.

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி, கடந்த கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 25.6 செ.மீ அதிகனமழை பதிவாகியுள்ளது. ஊத்து பகுதியில் 25 செ.மீ மழை பெய்துள்ளது. காக்காச்சி பகுதியில் 22.5 செ.மீ மழையும், மாஞ்சோலை பகுதியில் 21 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 13.3 செ.மீ மழையும், குலசேகரப்பட்டினத்தில் 12.9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. கயத்தாறில் 11 செ.மீ மழை, தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 8.6 செ.மீ மழை, பாபநாசத்தில் 7.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
"இந்தியாவில் இரட்டை சதம் அடிக்க உள்ள இடங்கள் மாஞ்சோலை பகுதியின் ஊத்து மற்றும் நாலுமுக்கு. வடகிழக்கு பருவமழையில் மிக அதிக மழை பெய்யும் இடங்கள் இவை தான். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நாலுமுக்கு பகுதியில் 205.7 செ.மீ மற்றும் ஊத்து பகுதியில் 207.5 செ.மீ பதிவாகியுள்ளது." என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவிய, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழகத்தில், 16 மாவட்டங்களில், இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு, வட மேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், மேலும் வலுப்பெறக்கூடும். இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலுார், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களில், சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று கனமழை பெய்யும்.
இதேபோல், நாளை முதல் 28 ஆம் தேதி வரை, தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications