Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெல்லை மாவட்டத்தை வெளுத்தெடுத்த அதிகனமழை.. இந்த ஏரியாவில் தான் மிக அதிக மழை! வெதர்மேன் அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 26 செ.மீ அதிகனமழை பதிவாகியுள்ளது. அம்பாசமுத்திரம் பகுதியில் கனமழை வெளுத்தெடுத்த நிலையில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று மதியம் நிலவரப்படி, அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், ஊத்து பகுதியில் 12 செ.மீ மழை பெய்திருந்தது.

Rain weather senyar chennai

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி, கடந்த கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 25.6 செ.மீ அதிகனமழை பதிவாகியுள்ளது. ஊத்து பகுதியில் 25 செ.மீ மழை பெய்துள்ளது. காக்காச்சி பகுதியில் 22.5 செ.மீ மழையும், மாஞ்சோலை பகுதியில் 21 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 13.3 செ.மீ மழையும், குலசேகரப்பட்டினத்தில் 12.9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. கயத்தாறில் 11 செ.மீ மழை, தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 8.6 செ.மீ மழை, பாபநாசத்தில் 7.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

"இந்தியாவில் இரட்டை சதம் அடிக்க உள்ள இடங்கள் மாஞ்சோலை பகுதியின் ஊத்து மற்றும் நாலுமுக்கு. வடகிழக்கு பருவமழையில் மிக அதிக மழை பெய்யும் இடங்கள் இவை தான். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நாலுமுக்கு பகுதியில் 205.7 செ.மீ மற்றும் ஊத்து பகுதியில் 207.5 செ.மீ பதிவாகியுள்ளது." என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவிய, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழகத்தில், 16 மாவட்டங்களில், இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு, வட மேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், மேலும் வலுப்பெறக்கூடும். இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலுார், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களில், சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று கனமழை பெய்யும்.

இதேபோல், நாளை முதல் 28 ஆம் தேதி வரை, தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+