‛காலை 10 மணி வரை வார்னிங்’.. தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை ‛அலர்ட்’
சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக மே மாதத்தில் வெயில் வெளுத்து வாங்கும். ஆனால் இந்த முறை மே மாதம் என்பது முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. அதாவது தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.

இதற்கிடையே தான் வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை 5.30 மணியளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானத வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவும். பிறகு மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25ம் தேதி மாலை நிலவ உள்ளது.
இந்நிலையில் தான் வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை 5.30 மணியளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி, தென்கசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் அடுத்த 3 மணிநேரத்துக்கான வானிலை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛தமிழகத்தில் காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி நாகை, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மழையின் காரணமாக 3 மாவட்டங்களின் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம். சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட சிறிய வகையிலான பாதிப்புகள் ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
என்னங்க சொல்றீங்க.. திடீர் சென்னை, பெங்களூர் ஆலங்கட்டி மழைக்கு காரணம்.. பில் கேட்ஸ்ஸா? மாஸ்டர்மைண்ட் -
அடிச்சு பெய்யப்போகும் மழை.. பெரிய சம்பவம் இருக்கு! உஷாரா இருங்க மக்களே! -
மறந்தும் நீங்களாக ஆஸ்பிரின், பாராசிட்டமால் சாப்பிட வேண்டாம்.. திருப்பத்தூர் கலெக்டர் வார்னிங் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications