சென்னையில் கணிக்க முடியாத வானிலை.. எப்போது மழை பெய்யும்? வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னை: சென்னையில் திடீரென மழை கொட்டும் என்றும், சிறிது நேரத்திற்கு பின்னர் மீண்டும் வெயில் இருக்கும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் கூறியுள்ளார். நவ.25ம் தேதி வரை சென்னையில் வானிலை இப்படித்தான் இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "இலங்கைக்கு அருகே நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, குமரி கடலை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நகர்ந்தால், தமிழகத்தின் பெருவாரியான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பதிவாகியிருக்கிறது. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழை வரை பதிவாகியிருக்கிறது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். இந்த வானிலை நவ.25ம் தேதி வரை நீடிக்கும். இது கனமழையாக இல்லாமல், ரசிக்கக்கூடியதாக இருக்கும்.
புயல் சின்னத்தை பொறுத்தவரை, டிசம்பர் மாதத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. புயல் உருவாக இன்னும் 8-9 நாட்கள் இருக்கிறது. புயலின் போக்கை அறிய, இன்னும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுகிறது.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது குமரி கடலை நோக்கி நகர்ந்தால், தமிழகத்தில் மழைக்கு பரவலாக வாய்ப்பு இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்யும். குறிப்பிட்ட இடைவெளியுடன் அனைத்து மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகை என, டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதேபோல ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் சில பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக நெல்லையின் மாஞ்சோலை பகுதியில் அதி கனமழை பெய்யும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறிக்கையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் திருப்பூர் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications