பனி பெய்தால் மழை பெய்யாது! கட்டுக்கதைகளை உடைத்த காற்றழுத்தம்! புயலாக நல்ல வாய்ப்பு! வெதர்மேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குளிரடித்தால் மழை பெய்யாது, வடகிழக்கு திசையை நோக்கிச் சென்றால் மழை வராது, பனி வந்தால் மழை வராது என்ற கட்டுக்கதைகளை இந்த காற்றழுத்தம் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னையில் நள்ளிரவில் சிறிய அளவிலான மேகக் கூட்டங்கள் 20 முதல் 40 மி.மீ மழையை கொடுத்தன. புதுவை கடலோர பகுதியிலிருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு கடலோர பகுதியிலிருந்தும் ஆழ்ந்த காற்றழுத்தம் தொலைவில் இருக்கிறது.

rain


குளிரடித்தால் மழை பெய்யாது, வடகிழக்கு திசையை நோக்கிச் சென்றால் மழை வராது, பனி வந்தால் மழை வராது என்ற கட்டுக்கதைகளை இந்த காற்றழுத்தம் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது.

குளிர் வந்தால் மழை பெய்யாது- காற்றழுத்தமோ புயலோ கடலில் மையம் கொண்டிருந்தால் நிலத்தின் பக்கம் எப்போதும் வெப்பநிலை குறையும். எனவே பகல் நேரத்திலும் குளிர்ச்சியான சூழல் நிலவும். அந்த புயல் நம் தமிழக திசையை நோக்கி வர தொடங்கினால் லேசான வெப்பம் இருக்கும்.

வடகிழக்கு பக்கம் போனால் மழை வராது- வடகிழக்கு பக்கம் இந்த காற்றழுத்தம் போகும் என்பது தற்காலிகம்தான். திசையில் மாறுபாடு ஏற்படும் போது அந்த சிஸ்டம் தாமதமாகவும் குறைந்த வேகத்திலும் நகரும்.

பனி இருக்கு மழை வராது- வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை இல்லாத போது காலை நேரங்களில் பனியும் குளிர்ச்சியான சூழலம் நிலவும் என்பது பொதுவான ஒரு விஷயம்தான்.

எனவே இந்த ஆழ்ந்த காற்றழுத்தம் புயலாக மாற நல்ல வாய்ப்புகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது: நவ.29-ம் தேதி, டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுவை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

நவ.30-ம் தேதி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

நவம்பர் 29 மாலை முதல் நவம்பர் 30-ம் தேதி மதியம் வரை, வட தமிழக கடலோர மாவட்டங்கள், மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்றானது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் நவ.30-ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+