Rain: எல்லாமே நல்லபடியா போய்கிட்டிருக்கு! காஞ்சிபுரத்தில் இடியுடன் கூடிய மழை! வெதர்மேன் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சிபுரம் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். வரும் 23 ஆம் தேதி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த உருவாகிறது. அதன் பிறகு வடதமிழகத்தில் வெப்பச்சலனம் படிப்படியாக குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

weatherman

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது: இதுவரை எல்லாமே நல்லபடியாகவே உள்ளன. காஞ்சிபுரத்திற்கு மேக கூட்டங்கள் நகர்ந்து விட்டன. அவை அங்கேயே நின்றுவிட்டால் சிறந்த மழையை கொடுக்கும்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது. அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகவுள்ளதால் வடதமிழகத்தில் மழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. வரும் 23 ஆம் தேதி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த உருவாகிறது. அதன் பிறகு வடதமிழகத்தில் வெப்பச்சலனம் படிப்படியாக குறையும்.

தாம்பரம்- கூடுவாஞ்சேரி- சிறுச்சேரி இடைய் காற்று நிலை கொண்டிருக்கிறது. அரபிக் கடலில் வளி மண்டல காற்றழுத்தமானது உருவாவதால் இன்று மேற்கு பகுதியில் இருந்து காற்று நிலப்பகுதிக்கு வீசும். இதனால் இன்று மழையை என்ஜாய் செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. தென் பகுதியில் அதிகளவு மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது.

அது போல் சதுரகிரி மலையில் உள்ள நீர் வீழ்ச்சிகளில் குளிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த மழை குறித்து சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது: தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா- வடதமிழக பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தெற்கு கர்நாடக உட்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வரும் 22-ம் தேதி வாக்கில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் எனவும் பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+