ரஜினி சார்... பெரும் துயரத்துக்கு நடுவே தூத்துக்குடிக்கு சினிமா சூட்டிங் போவது எல்லாம் எப்படி சரி?
தூத்துக்குடி: பெருமழை வெள்ளத்தில் ஒட்டுமொத்த தென்மாவட்டங்களில் கரை புரண்டோடும் பெரும் துயரம் நீடிக்கிறது.. இந்த மக்களின் துயரத்தில் துளியளவேனும் பங்கெடுக்காமல் இதே பெருமழை பெய்த வெள்ளம் பாய்ந்தோடிய மண்ணில் சினிமா சூட்டிங் நடத்துவதற்கு நடிகர் ரஜினிகாந்த் கால் வைக்க எப்படித்தான் மனது வந்ததோ தெரியவில்லை என்பதுதான் தென் தமிழ்நாட்டு மக்களின் பேராதங்கம்.
தமிழ்நாட்டுக்கு வந்து திரைத்துறையில் உச்ச நட்சத்திரமானவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் 1980 முதல் 2021 வரை தொடர்ந்து பேசு பொருளாக இருப்பவர். தமிழ்நாடு சார்ந்த போராட்டங்களில் அத்திபூத்தது போல எப்போதாவது பங்கேற்பார். ஆனால் கர்நாடகாவுக்கு போய் அப்படியே தமிழ்நாட்டுக்கு எதிராக பேசுவார். இத்தனைக்கும் பிறகும் தமிழ்நாட்டின் பாவப்பட்ட ஜனங்கள், "சூப்பர் ஸ்டாராக" "தெய்வமாக" கொண்டாடிக் கொண்டே இருக்கின்றன.

ரஜினிகாந்தும் மன்றம் வைத்தார்.. ரஜினிகாந்தும் அரசியலுக்கு வரப் போகிறேன் என்றார்.. இந்த மன்றமும் அரசியலும் நிச்சயம் தமிழ் மக்களுக்கானது இல்லை என்பதை ஒருவகையில் புரிந்து கொண்ட தமிழ் ஜனங்க.. அந்த ரஜினிகாந்தை கேலி பொருளாகத்தான் பார்த்தனர். இதனால் ஆளை விட்டால் போதுமடா சாமி என அரசியல் முடிவில் இருந்து அந்தர் பல்டி அடித்து தப்பி ஓடிப் போனார்.
திரைப்படங்களிலும் பொது மேடையிலும் என்னை வாழ வைக்கும் தமிழ் மக்கள், என் சாமீ தமிழ் மக்கள் என்றெல்லாம் உருக உருக பேசி பேசி நடிக்கிறவர்தான் ரஜினிகாந்த். ஆனால் தமிழ் ஜனங்க என்ன பாதிப்பை எதிர்கொண்டாலும் தமிழ் ஜனங்க அள்ளி அள்ளி கொடுத்த அத்தனை ஆயிரம் கோடி ரூபாயில் ஒற்றை ரூபாயை கிள்ளி கிள்ளி கூட கொடுக்க மனமே இல்லாத நெஞ்சமற்ற கும்பலில் ஒருவராகவே ரஜினிகாந்த் எனும் மனிதரும் இருக்கிறார்.
இதை அப்பட்டமாக இன்று நிரூபித்தும் இருக்கிறார். வரலாறு காணாத பெருமழை.. ஒட்டுமொத்த தூத்துக்குடி, திருநெல்வேலியை உருக்குலைத்துப் போட்டிருக்கிறது. தூத்துக்குடி பழைய நிலைமைக்கு திரும்ப எத்தனை காலம் ஆகும் என்பதை சொல்லவே முடியாது என்பதுதான் யதார்த்தம்.. அந்த அளவுக்கு வெள்ளம் பாலம் பாலமாக தூத்துக்குடியை கூறு போட்டு கும்மி அடித்துவிட்டுப் போயிருக்கிறது.
கொஞ்சமும் கூட நெஞ்சிலே ஈரமும் இல்லை.. கொஞ்சமும் கூட இரக்கமுமே இல்லையே என்று சொல்வார்களே அதைப் போல,, அந்த தூத்துக்குடி மண்ணில் தமது சில நூறு கோடி புதிய சினிமா சம்பாத்தியத்தைப் பெறுவதற்காக "வேட்டையன்" சூட்டிங்குக்காக கால் வைத்திருக்கிறார் உச்சநட்சத்திரம் ரஜினிகாந்த் என்கிற போது எப்படி நாங்க கொதிக்காம இருப்போம் என்பதுதான் தெக்கத்தி சீமையின் கடும் கோபக் குரல்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications