வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னையில் நடக்கும் வானிலை மாற்றம்! வெதர்மேன் அறிவிப்பு
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், குமரிக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடையும் என்றும் இதன் காரணமாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மழை விட்டு விட்டு பெய்யும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது x தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி என தென் மாவட்டங்களில் கனமழை பதிவாகியிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்திருக்கிறது.

தற்போது குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது தீவிரமடைய தொடங்கியுள்ளது. இதனால் தென் தமிழகத்தில் கனமழை நீடிக்கும்.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில், மாநிலம் முழுவதும் பரவலான மழையை எதிர்பார்க்கலாம். அனைத்து மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்யும். இதன் மூலம் மத்திய, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் மிதமான அளவில் மழை இருக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் மழை விட்டு விட்டு பெய்யும்.
தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நெல்லை மாவட்டத்தின் மாஞ்சோலை பகுதியில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மிக அதிகனமழைக்கான வாய்ப்புகள் இல்லை.
புயலை பொறுத்தவரை, மிகவும் சிக்கலான அமைப்பாக இருக்கிறது. முன் கணிக்க முடியாதபடி இருக்கிறது. அடுத்த 7 நாட்களில் இந்த அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும். எனவே புயலின் தன்மையை அறிக காத்திருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த அக்.1ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. நேற்று வரை சராசரியாக 294.7 மி.மீ அளவக்கு மழை பதிவாகியிருக்கிறது. இந்த காலத்தின் இயல்பு மழை அளவு 311.9 மி.மீ. அந்த வகையில், இயல்பை விட மழை 6% குறைவாக பெய்திருக்கிறது. மொத்தமாக 11 மாவட்டங்களில்தான் மழை அதிகமாக பெய்திருக்கிறது. அதிகபட்சமாக திருநெல்வேலியில் 669.3 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. இது இயல்பை விட 96% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள்












Click it and Unblock the Notifications