சென்னைக்கு இதுதான் கடைசி.. வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்! வானிலையில் மாற்றம்!
சென்னை: வடகிழக்கு பருவமழை முடிந்த பின்னரும், வட தமிழகத்தின் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை மழை எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை, இரண்டு பருவங்கள் மழைப்பொழிவை கொண்டு வரும். ஒன்று தென்மேற்கு பருவமழை. இது ஜூன் மாதம் தொடங்குகிறது. தென் மாவட்டங்களில்.. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைப்பொழிவை கொண்டு வருகிறது. இதற்கடுத்துதான் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.

பருவமழையும் சென்னையும்
அக்டோபர் இறுதியில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை, பொங்கல் வரை நீடிக்கும். வழக்கமாக பொங்கலுக்கு முன்னரே இந்த மழை முடிவுக்கு வந்துவிடும். இந்த ஆண்டும் இப்படித்தான் முடிவுக்கு வந்தது. ஆனால், வங்கக்கடலில் ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக, பொங்கலுக்கு பிரேக் விட்ட மழை தற்போது வரை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
ஜனவரி மழை
ஜனவரில் சென்னைக்கு என இயல்பான மழை அளவு இருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு இந்த இயல்பை விட மழை கூடுதலாக பெய்திருக்கிறது. இந்த கூடுதல் மழையை மக்கள் பெரிய அளவில் ரசிக்கவில்லை. மழை காரணமாக கொசு உற்பத்தி அதிகமனதால், தமிழகத்தில் சிக்கன் குனியா பாதிப்பும் அதிகரித்திருக்கிறது.
குட் நியூஸ் என்ன?
இப்படி இருக்கையில் சென்னையில் மழை எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. வெதர்மேன் இது குறித்து தனது x பக்கத்தில், "நல்ல மழை, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு பரவி வருகிறது. இந்த மழை அனுபவிக்கக்கூடியதாகதான் இருக்கும். நாளை முதல் மழை குறையும். இன்று இரவு தொடங்கி நாளை காலை வரை பெய்யும் மழைதான் நாம் காணும் கடைசி மழையாக இருக்கும். இதனையடுத்து மழைக்கு பெரிய பிரேக் இருக்கும்" என்று கூறியுள்ளார்.
ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட்
முன்னதாக அடுத்த 2 மணி நேரத்திற்கான மழை குறித்த அப்டேட் வெளியாகியிருந்தது. அதில், இரவு 10 மணி வரை செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications