சென்னைக்கு இதுதான் கடைசி.. வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்! வானிலையில் மாற்றம்!
சென்னை: வடகிழக்கு பருவமழை முடிந்த பின்னரும், வட தமிழகத்தின் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை மழை எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை, இரண்டு பருவங்கள் மழைப்பொழிவை கொண்டு வரும். ஒன்று தென்மேற்கு பருவமழை. இது ஜூன் மாதம் தொடங்குகிறது. தென் மாவட்டங்களில்.. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைப்பொழிவை கொண்டு வருகிறது. இதற்கடுத்துதான் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.

பருவமழையும் சென்னையும்
அக்டோபர் இறுதியில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை, பொங்கல் வரை நீடிக்கும். வழக்கமாக பொங்கலுக்கு முன்னரே இந்த மழை முடிவுக்கு வந்துவிடும். இந்த ஆண்டும் இப்படித்தான் முடிவுக்கு வந்தது. ஆனால், வங்கக்கடலில் ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக, பொங்கலுக்கு பிரேக் விட்ட மழை தற்போது வரை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
ஜனவரி மழை
ஜனவரில் சென்னைக்கு என இயல்பான மழை அளவு இருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு இந்த இயல்பை விட மழை கூடுதலாக பெய்திருக்கிறது. இந்த கூடுதல் மழையை மக்கள் பெரிய அளவில் ரசிக்கவில்லை. மழை காரணமாக கொசு உற்பத்தி அதிகமனதால், தமிழகத்தில் சிக்கன் குனியா பாதிப்பும் அதிகரித்திருக்கிறது.
குட் நியூஸ் என்ன?
இப்படி இருக்கையில் சென்னையில் மழை எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. வெதர்மேன் இது குறித்து தனது x பக்கத்தில், "நல்ல மழை, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு பரவி வருகிறது. இந்த மழை அனுபவிக்கக்கூடியதாகதான் இருக்கும். நாளை முதல் மழை குறையும். இன்று இரவு தொடங்கி நாளை காலை வரை பெய்யும் மழைதான் நாம் காணும் கடைசி மழையாக இருக்கும். இதனையடுத்து மழைக்கு பெரிய பிரேக் இருக்கும்" என்று கூறியுள்ளார்.
ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட்
முன்னதாக அடுத்த 2 மணி நேரத்திற்கான மழை குறித்த அப்டேட் வெளியாகியிருந்தது. அதில், இரவு 10 மணி வரை செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications