சென்னை மக்களே ஆபிஸ் முடித்து வீடு திரும்பும்போது கவனம்! லைட்டா மழை இருக்கும்.. வெதர்மேன் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வட தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மையம் வலுவிழந்திருக்கிறது. எனவே கனமழைக்கு வாய்ப்பு குறைவு என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில், இன்று மாலை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே, கனமழைக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் சென்னை மக்கள் நவம்பர், டிசம்பரை கண்டு சில நேரங்களில் அச்சமடைந்திருக்கின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே கனமழை தொடங்கிவிட்டது. செப்டம்பர் முதல் வாரத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுத்த மண்டலமாகவும் உருவானது. இதனால் சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

rain chennai weather

வேளச்சேரி மக்கள் அங்குள்ள மேம்பாலங்களில் தங்கள் கார்களை பார்க் செய்தனர். ஆனால் மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. சென்னை தவிர்த்து தெற்கு ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. எனவே, சென்னை மக்கள் ஜஸ்ட்டு மிஸ்ஸில் தப்பினர்.

இப்படி இருக்கையில் ஓரிரு நாட்களுக்கு முன்னர் மீண்டும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மீண்டும் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்தது. ஆனால், இது அவ்வளவு வலுவானதாக இல்லை என்பதால், தற்போது வலுவிழந்துள்ளது. எனவே மிக கனமழைக்கான வாய்ப்பு குறைவு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு பெரிய பாதிப்பு இருக்காது எனவும் கூறியுள்ளது.

அந்த வகையில் அடுத்த மூன்ற மணி நேரத்தில் அதாவது, இரவு 7 மணி வரை விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

மறுபுறம் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், சென்னையில் 5-10 நிமிடம் அளவுக்கு மழையை கொடுக்கும் அளவுக்கு மேகங்கள் திரண்டுள்ளன. எனவே, அலுவலகம் முடித்து வீடு திரும்புவோர் கவனமாக இருங்கள் என்று கூறியுள்ளார். மட்டுமல்லாது நீண்ட நாட்களுக்கு பிறகு திருநெல்வேலியில் மழை பெய்து வருகிறது. அங்கு கனமழைக்கான மேகங்கள் திரண்டுள்ளன" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+